Tuesday, February 27, 2007

நடிகை மும்தாஜுக்கு வீரச்செயல்களுக்கான விருது


தற்போது கிடைத்த தகவலின்படி நடிகை மும்தாஜுக்கு இந்திய அரசின் வீரச்செயல்களுக்கான விருதினை சிறப்பு தகுதியில் வழங்கும்படி தமிழ்நாடு அரசால் பரிந்துரைக்கப் பட்டுள்ளது.சமீபத்தில் தமிழக முதல்வர் கருணாநிதிக்கு சிறப்புக்காட்சியாக ""வீராச்சாமி" படத்தை திரையிட்டு காட்டியுள்ளார் விஜய T(terror??) ராஜேந்தர்.முதல்வர் படம் பார்த்துவிட்டு ஒன்றுமே சொல்லாமல் சென்று விட்டதாக தகவல்(தகவல் உபயம்: ஜுனியர் விகடன் மிஸ்டர் மியாவ்).


இப்பொழுதுதான் படம் பார்த்த அதிர்ச்சியில் இருந்து (படத்தில் விஜய T. ராஜேந்தரை பார்த்த அதிர்ச்சியில் இருந்து ) மீண்ட முதல்வர் உடனடியாக மன்மோகன் சிங்குக்கு தொலைபேசி, இந்த படத்தில் ராஜேந்தருடன் ஜோடியாக நடிக்கின்ற அளவுக்கு தைரியம் உள்ள மும்தாஜுக்கு வீரச்செயல்களுக்கான இருப்பதிலேயே உயர்ந்த விருதை குடுக்க மறுத்தால், மத்தியஅரசுக்கு குடுத்து வரும் ஆதரவை வாபஸ் பெறப் போவதாக சொல்லி இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தெரிய வருகிறது.கூடிய விரைவில் இதற்கான அறிவிப்பை நீங்கள் எதிர்பார்க்கலாம்.


நாமும் நமது சார்பில் மும்தாஜுக்கு வீரச்செயல் புரிந்ததற்கு நமது பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறோம்.

இரயில்வே பட்ஜெட் -2007


கோமாளி என்று அரசியலில் பலராலும், ஊடகங்களிலும், மக்களாலும் அழைக்கப்படும் நமது இரயில்வேதுறை அமைச்சர் திரு.லாலு பிரசாத் யாதவ் நேற்று அவருடைய நான்காவது இரயில்வே பட்ஜெட்டை வழங்கினார். தற்போது இருக்கும் சூழ்நிலைகள் மற்றும் காரணிகளை கணக்கில் கொண்டு பார்த்தால் நிச்சயம் ஒரு மிகச் சிறந்த, No-tears பட்ஜெட் என்று சொல்லக்கூடிய பட்ஜெட் வழங்கி இருக்கிறார். பிரயாணிகளுக்கு ஆறுதல் தரும் வகையில் தொடர்ச்சியாக மூன்றாவது வருடம் எந்த வித பிரயாணக் கட்டண உயர்வும் அற்ற பட்ஜெட் கொடுத்துள்ளார். சீசன் டிக்கெட் கட்டணமும் ஏற்றப்படவில்லை. புறநகர் அல்லாத சாதாரண ரெயில்களில் 2-ம் வகுப்பு கட்டணமும், அதி விரைவு அல்லாத விரைவு ரெயில்களுக்கான 2-ம் வகுப்பு கட்டணமும் 1 ரூபாய் குறைக்கப்பட்டு உள்ளது. இந்த சலுகை தினசரி பயணம் செய்வோருக்கு மட்டுமே பொருந்தும் . பெருகி வரும் குறுகிய இடைவெளி, குறைந்த கட்டண விமான சேவைகளுடன் போட்டி போடுவதன் முதல் படியாக , இந்த முறை குளிர்சாதன வசதி செய்யப்பட்ட பெட்டிகளில் அனைத்து பிரிவுகளிலும் கட்டணக் குறைப்பு செய்யப்பட்டுள்து. ஏ.சி. முதல் வகுப்பு கட்டணம் கூட்ட நெரிசல் உள்ள விழா, விடுமுறை காலங்களில் 3 %, சாதாரண காலங்களில் 6 % குறைக்கப்பட்டு இருக்கிறது. இரண்டு அடுக்கு பெட்டிகளில் விழாக்காலங்களில் 2 %, சாதாரண காலங்களில் 4 % குறைக்கப்பட்டு உள்ளது. ஏ.சி. மூன்று அடுக்கு கட்டணம் விழாக்காலங்களில் 4 %, சாதாரண காலங்களில் 8 % குறைக்கப்பட்டு இருக்கிறது ஏ.சி. மூன்று அடுக்கு கட்டணம் விழா மற்றும் சாதாரண காலங்களில் 4 % குறைக்கப்படுகிறது.

இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகளில் படுக்கைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட உள்ளது.குளிர்சாதன வசதி கொண்ட பெட்டிகளிலும் இருக்கைகள் மற்றும் படுக்கைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட உள்ளது. மத்திய தேர்வு ஆணையம் மற்றும் ரெயில்வே தேர்வு ஆணையம் நடத்தும் தேர்வுகளில் கலந்து கொள்ள செல்பவர்களுக்கு 50 % கட்டண சலுகை அளிக்கப்படும். மூத்த குடிமகன்களுக்கும், தனியாக பயணம் செய்யும் 45 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கும் ரெயில் பெட்டிகளில் கீழே உள்ள படுக்கை ஒதுக்கப்படும்.தற்போது இயங்கும் அதிவேக ராயில்களில் முன் பதிவு செய்யப்படாத பெட்டிகளின் எண்ணிக்கை 6-ஆக உயர்த்தப்படுகிறது.மேலும் இந்த பெட்டிகளில் தற்போது உள்ள மர இருக்கைகள் மாற்றப்பட்டு குஷன் இருக்கைகள் அமைக்கப்பட உள்ளது.உடல் ஊனமுற்றவர்களுக்காக
பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட பெட்டிகள் விரைவில் அறிமுகப்படுத்தப்படும்.




என்னை போன்ற சோம்பேறிகளை ஊக்குவிக்கும் வகையில் பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்ய தானியங்கி இயந்திரங்களை பெட்ரோல் பங்குகளிலும், ஏ.டி எம்களிலும் வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் நாங்கள் இது வரை செய்த சேவையை பாராட்டி இணையத்தின் மூலம் செய்யப்படும் முன்பதிவிற்கு குளிர்சாதன பெட்டிகளுக்கு 20 ரூபாயும்,இரண்டாம் வகுப்பு பெட்டிகளுக்கு 5 ரூபாயும் குறைக்கப்பட்டுள்ளது..

சரக்குரயில் கட்டணங்களை உயர்த்தாததுடன் பெட்ரோல், டீசல்,இரும்புத் தாது போன்ற பல பொருட்களுக்கு சரக்கு கட்டணங்களை குறைத்திருப்பதின் மூலம் தற்போது இருக்கும் பணவீக்க பிரச்சினைக்கும் தீர்வு காண சிறிது உதவி உள்ளார். இந்த வருடம் சரக்கு ரயில் கட்டணங்கள் மூலம் மிகுந்த வருவாய் வரும் என எதிர் பார்க்கப்படுகிறது.

மற்ற சிறப்பம்சங்களாக 32 புதிய ரயில்கள்,8 கரீப் ரத் என்று சொல்லப்படும் ரயில்கள்,மும்பையின் புறநகர் சுற்றுலா பயணிகளுக்கான சிறப்பு பயணக்கட்டண முறை , முக்கிய ரயில் நிலையங்களில் பாதுகாப்பை அதிகப்படுத்தும் விதத்தில் மோப்ப நாய்கள் எண்ணிக்கை அதிகரிப்பு,CC TV எனப்படும் கண்காணிப்பு தொலைகாட்சிகள் மற்றும் மெட்டல் டிடக்டெர் பயன்பாடு , பயணச்சீட்டு பரிசோதகருக்கு காலி இருக்கைகள் , பெட்டிகள் நிலவரங்கள் தெரிய உதவும் கையடக்க தானியங்கி கணினி, இரயில்வே பாதுகாப்பு படை காலி இடங்கள் நிரப்புதல் போன்ற பல விசயங்களை சொல்லலாம்.முக்கியமாக இந்த ஆண்டும் இரயில்வேதுறை மிகுந்த லாபத்தை ஈட்டும் என்று எதிர்பார்க்ககப்படுகிறது.





இந்த சிறந்த பட்ஜெட் தாக்கல் செய்த லாலுவை பாராட்டுவதுடன், இதைச் செய்ய கூடிய அளவுக்கு இரயில்வேதுறைக்கு சென்ற வருடம் மிகுந்த அளவில் லாபம் ஈட்டி தர உழைத்த அனைத்து இரயில்வேதுறை ஊழியர்களுக்கும், அதிகாரிகளுக்கும் ஒரு royal salute.தொடரட்டும் உங்கள் சிறந்த சேவை.

Saturday, February 24, 2007

இப்படி செஞ்சா என்ன ?

நேத்து ராத்திரி (யம்மா !னு பின்னணி எல்லாம் கொடுக்கப்படாது) ,வீட்டில நண்பர்கள் எல்லாம் வார இறுதிக்கு ஊருக்கு போய்ட்டாங்க. தனிமையில என்ன பண்றதுன்னு தெரியல. சரி வலையில புகுந்து வலைப்பூக்களை அலசுவோம்னு, அப்படியே இளையராஜா பாட்டு போட்டுவிட்டு செட்டிங்ஸ் எல்லாம் ரெடி பண்ணி வலையில உலாவிக்கிட்டு இருந்தேன் .ஹே ராம் பாடல்கள் பாடிக்கிட்டு இருக்கும்போதே ஒரு பாட்டுல நடுவுல

வாரண மாயிரம் சூழவ லம்செய்து
நாரண நம்பி நடக்கின்றா னென்றெதிர்
பூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும்
தோரணம் நாட்டக் கனாக்கண்டேன் தோழீநான்

அப்படினு ஒரு செய்யுள் (இது பாசுரமா இல்லை வேற வகையான்னு எல்லாம் எனக்கு சரியா தெரியாது .நான் சின்ன வயசுல தமிழ் பாடத்துல படிசசதால எனக்கு செய்யுள் அவ்வளவுதான்) வந்தது.நானும் என்னை அறியாமலேயே அந்த செய்யுளை பாட்டு வடிவத்தில் பாடிக்கிட்டு இருந்தேன்(சரி சரி பாடுற மாதிரி ). திடீருன்னு நம்ம மூளைக்குள்ள (சாமி சத்தியமா கொஞ்சம் இருக்குப்பா) "டேய் நீ இப்ப பாடுன அந்த செய்யுளை ஞாபகம் வைக்க சின்ன வயசுல எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பன்னு" அலாரம் அடிக்குது."அட ஆமாம்"னு அப்படியே மல்லாக்கப் படுத்துக்கிட்டு விட்டத்தை வெறிச்சு யோசிச்சப்போ இந்த மாதிரி இன்னும் ஒரு ரெண்டு மூணு இடங்களில் சினிமா பாடல்களின் நடுவில் வந்த தமிழ் செய்யுள்கள் பாட்டு வடிவத்திலேயே ஞாபகம் வந்தது. உதாரணத்துக்கு நம்ம தலைவரோட "தளபதி" படத்துல "ராக்கம்மா கைய தட்டு" பாட்டுக்கு நடுவுல வர்ற

குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயில் குமிண் சிரிப்பும்
பனித்த சடையும் பவளம்போல் மேனியில் பால்வெண்ணீறும்
இனித்தமுடைய எடுத்த பொற்பாதமும் காணப்பெற்ல்
மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே செய்யுள் பாட்டு வடிவத்துல நல்லா ஞாபகம் இருக்கு. அப்புறம் சங்கமம் படத்துல "மார்கழி திங்களல்லவா" பாட்டு ஆரம்பிக்கறதுக்கு முன்னாடி வர்ற

மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்
சீர்மல்கும் ஆய்ப்பாடி செல்வச் சிறுமீர்காள்
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
ஏராந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்

இப்படி யோசிக்க யோசிக்க நெறய ஞாபகம் வருது.ஞாபகத்துக்கு வந்த பாடல் வடிவத்தில் இருந்த மற்ற சில செய்யுள்களின் பட்டியல் பதிவின் இறுதியில் உள்ளது. .சினிமா பாட்டு மட்டும் இல்லாம சின்ன வயசுல ராகதோட பாட்டு வடிவத்துல சொல்லிக் குடுத்த "நிலா நிலா ஓடி வா", "கை வீசம்மா கை வீசு" ,"மாம்பழமாம் மாம்பழம்" அப்புறம் 10த் அண்ட் 12த்-ல எங்க தமிழ் வாத்தியார் ராகம் போட்டு சொல்லி குடுத்த "கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது ", வஞ்ச புகழ்ச்சி அணிக்கு எடுத்துக்காட்டா சொன்ன

பாரி பாரி என்று பல ஏத்தி
ஒருவர் புகழ்வர் செந்நா புலவர்
பாரி ஒருவனுமல்லன் மாரியும்
உண்டீங்கு உலகு புரப்பதுவே

பள்ளியிலே காலை பிரார்த்தனையில் பாடிய "சண்முகக்கடவுளே போற்றி சரவணத்துதித்தாய் போற்றி" , "நெஞ்சக்கன கல்லு நெகிழ்ந்துருக தஞ்சத்தருள் ஷண்முகனுக்கியல் சேர்"
எல்லாம் நல்லா ஞாபகம் இருக்கு.ஆனா இந்த செய்யுளுடன் படித்த மற்ற செய்யுள்களெல்லாம் சரியா ஞாபகம் வரலை.சரி எதுக்கு இப்போ மொக்கை போட்டு கிட்டு இருக்க,விசயத்துக்கு வான்னு சொல்றீங்களா.நம்ம பள்ளிகளில் இந்த மாதிரி ,நமக்கு படிக்கிறதுக்கும் ஞாபகம் வைச்சுகிறதுக்கும் கஷ்டமா இருக்குற இந்த செய்யுள் பகுதிகளை எல்லாம் இந்த மாதிரி பாடல் வடிவத்தில் (இசை வடிவத்தில்) சொல்லிக் குடுத்தா எல்லோரும் நிச்சயமா அதை நல்லா ஞாபகம் வைத்து கொள்ளலாம். தளபதி பட பாட்டுக்கு நடுவுல வர்ற "குனித்த புருவம்" செய்யுளை உங்களில் அநேகம் பேர் பாடலுடன் சேர்ந்து சொல்ல முடியும்னு நான் நம்பறேன்.அந்த காலத்துல இதை எழுதினவங்களும் செய்யுளை இசை வடிவததில்தான் எழுதி இருக்காங்க. அதனாலே இதுக்கு இசை வடிவம் குடுக்கறதும் ரொம்ப கஷ்டம் இல்லை. (இளையராஜாவின் திருவாசகம் எடுத்துக்காட்டு) .ஒண்ணு ரெண்டு வருசங்களுக்கு முன்னாடி எப்பவோ தமிழ்நாடு அரசு ஆசிரியர்களை இந்த மாதிரி interactive way-ல பாடம் சொல்லித்தர பயிற்சி எல்லாம் குடுத்தாங்க . அதுபோல ஏன் இந்த செய்யுள்களையும் சொல்லிக் கொடுக்கக் கூடாது??!. அவ்வளவுதான் நான் சொல்ல வந்தது.

அப்பாடி! பதிவுக்கு பதிவும் ஆச்சு கருத்துக்கு கருத்தும் ஆச்சு.

பின் குறிப்பு :

இப்படி சினேமா பாடல்களின் இடையில் அல்லது பாடலாகவே வந்தவை சிலவற்றின் தொகுப்பு:

திருவிளையாடல் படத்தில் வரும்

கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி
காமம் செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழீஇய நட்பின் மயிலியல்
சரியெயிற் றரிவை கூந்தலின்
நறியவும் உளவோ நீயறியும் பூவே.



ஒளவையார் படத்தில் வரும்

அரியது கேட்கின் வரிவடிவேலோய்
அரிது அரிது மானிடராதலரிது
மானிடராயினும் கூன்குருடு செவிடு
பேடுநீங்கிப் பிறத்த லரிது
பேடுநீங்கிப் பிறந்த காலையும்
ஞானமும் கல்வியும் நயத்தலரிது
ஞானமும் கல்வியும் நயந்த காலையும்
தானமும் தவமும் தான் செயலரிது
தானமும் தவமுந்தான் செய்வ ராயின்
வானவர் நாடு வழி திறந்திடுமே


திருவருட்செல்வரில் வரும் "பண்ணின் நேர் மொழியாள ", "மாசில் வீணையும ", " காதலாகிக் கசிந்து ", " சதுரம் மறை தான் துதி செய்து ", "அப்பன் நீ " போன்ற தேவாரப் பண்களும் " உலகெலாம் உணர்ந்து" என்ற பெரிய புராணக் காப்புச் செய்யுளும் , திருமால் பெருமையில் வரும் "பச்சைமாமலை போல் மேனி" போன்ற அருமையான பழந்தமிழ்ப் பாக்களும,பாரதியார் பாடல்களான

1) நல்லதோர் வீணை செய்து அதை
2)காக்கை சிறகினிலே நந்தலாலா
3)காணி நிலம் வேண்டும் ..............மற்றும் பல


பரதிதாசன் பாடலான தமிழுக்கும் அமுதென்று பேர் இது போல எவ்வளவோ எடுத்துக்காட்டு சொல்லலாம்.மேற்சொன்னவை எல்லாம் எனக்கு ஞாபகத்துக்கு வந்தவை மட்டும் தான்.இன்னும் எவ்வளவோ உள்ளது. தெரிந்த அன்பர்களும் நண்பர்களும் சொல்லலாம்.

Thursday, February 22, 2007

பேரரசு --The Terror




நெறய தமிழ் பட போஸ்டர்ல எல்லாம் பார்த்து இருப்பீங்க " இந்த பொங்கல்/தீபாவளிக்கு மிரட்ட வருகிறது " அப்படின்னு போட்டு படம் பேரு போட்டிருக்கும். ஆனா ஒரு படத்தோட டைரக்டர் பேரை கேட்டாலே அவனவன் மெரண்டு ஓடுறான்னா அந்தப் பெருமை நம்ம "பெருந்தொந்தரவு" பேரரசுக்கு மட்டும்தான். இவரோட முதல் படம் "திருப்பாச்சி" -க்கு நானும் நண்பன் ஹரியும் ஈரோடு அபிராமி தியேட்டருக்கு பொங்கலுக்கு ரெண்டு நாள் கழிச்சு நைட் ஷோ போய் உக்காந்தோம். இது நடந்தது ஒரு ரெண்டு வருசம் முன்னாடி.படத்துல முதல் ரெண்டு மூணு சீன் பாத்தவுடனேயே எங்களுக்கு நல்லா வசமா மாட்டிக்கிட்டோம்னு தெரிஞ்சிடுச்சு. படம் ஆரம்பிச்ச கொஞ்ச நேரம் கழிச்சு படத்துல சாமிக்கு ரெண்டு மூணு ஆடுங்கள பலி குடுக்கற சீன் வந்தது.எனக்கு என்னமோ அங்க ஆட்டு மூஞ்சிக்கு பதிலா ஹரியோட முகமும்,என்னோட முகமும் தான் தெரியுது. நாங்க ஒருத்தர ஒருத்தர் பார்த்துக்கிட்டு "ரைட்ரா , இன்னைக்கு என்ன ஆனாலும் ஒரு கை பார்த்துடலாம்னு " முடிவு பண்ணிட்டு ரெடி ஆயிட்டோம். இன்னும் கொஞ்ச நேரம் கழிச்சு இளைய தளபதி முகத்துல சந்தனம் குங்குமம் பூசி அடையாளம் மாறுகிற சீன் வந்தப்போ எங்களால தாங்க முடியல. "சூப்பரப்பு"அப்படினு சொல்லிக்கிட்டு நல்லா கை தட்டி கெக்கே பிக்கேனு விழுந்து சிரிச்சுட்டு சுத்திப் பார்த்தா எல்லோரும் எங்களை ஒரு மாதிரி கொலை வெறியோட பார்க்குறானுங்க. "நண்பா, இடம், பொருள் ,நேரம் தெரியாம காமெடி பண்ணிட்டமோ" அப்படீனுட்டு அதுக்கு அப்புறம் ரொம்ப உஷாரா இருந்தோம்.A/C வேற நிறுத்திட்டானுங்க. அந்தக் கடுப்பு வேற.கொஞ்ச நேரம் கழிச்சு ஹரி ஆரம்பிச்சுட்டான். ஸ்கிரீன்ல படம் ஓடுறப்பவே இங்க கீழே திரை விமர்சனம் பண்ணி கிழிச்சு தொங்க விட்டுக்கிட்டு இருந்தான்.பாட்டெல்லாம் வேற "கீரைக்கட்டு, பக்கெட்டு, டிக்கெட்டு, ராக்கெட்டு" னு ரொம்ப இலக்கியத்தரமா இருந்ததுனால ஒண்ணும் முடியலை எங்களாலே.ஏதோ கும்பிடப்போன தெய்வம் தலைவி (Ex-தலைவி??) த்ரிஷா அப்பப்போ வெயிலுக்கு வேப்பங்காத்தா ( என்ன உவமை!. த்ரிஷாவை நினைச்சாலே பொங்கிட்டு வருது ) வந்து எங்களை காப்பாத்துனாங்க. ஒரு வழியா படம் முடிஞ்சு குத்துயிரும் குலையுயிருமா எஸ்கேப் ஆகி ஓடி வந்துட்டோம். அன்னைக்கு முடிவு பண்ணுனதுதான்,இனி பேரரசு பக்கம் தலை வச்சு கூட படுக்கறது இல்லைனு.

ஆனா,நம்ம தமிழ் ரசிகர்கள் ரொம்ப நல்லவங்க ஆச்சே.அந்த படத்தையும் ஓட வச்சுட்டாங்க.நம்ம பேரரசுவும் கலைத்தாயை குரல்வளையை நெரிச்சுக் கொல்லாம விடுறது இல்லைங்கற முடிவோட அடுத்து மீண்டும் இளைய தளபதிய(அநேகமா இவரையும் அடுத்து ஹிட் லிஸ்ட்-ல சேர்த்தணும்னு நினைக்கிறேன்) வச்சு "சிவகாசி " படம் ,அதுவும் தீபாவளிக்கு. அந்த வருசத்துல இருந்து பொங்கல்,தீபாவளி வந்தாலே எங்க இந்த பேரரசு பய ஏதாவது படம் ரிலீஸ் பண்ணிடுவானோன்னு பயமாவே இருக்கு. இந்த படத்துல பேரரசு நடிச்சது மட்டும் இல்லாம இவருக்கு பன்ச் டயலாக் வேற.சீட்டுக்கு அடியிலே லக்ஷ்மி வெடி வெடிசச effect-லதான் எல்லோரும் தியேட்டரை விட்டு வெளியே வந்தாங்க. " உங்கம்மா எங்கம்மா நம்மை சேர்த்து வைப்பாளா, சும்மா அட சும்மா நம்மை பெத்து விட்டாளா" அப்படினு பெற்றோர்களின் கடமையை விளக்கு வைத்து வெளிச்சம் போட்டு காட்டும் பாட்டு இந்த படத்தோட சிறப்பு அம்சம்.




இதுக்கு அடுத்து நம்ம "தல" அஜீத் தெரியாம இவரை நம்பி "திருப்பதி " படம் குடுத்துட்டார்.இவரோ "தல"ய "தறுதல" ஆக்கிட்டார் இந்த படத்துல.இவரு ஏறக்குறைய ஹீரோ மாதிரி(உவ்வே சொல்லவே குமட்டிகிட்டு வருது) நடிச்சு அஜீத்தை காமெடியன் ஆக்கிட்டார்.இந்த படம் பார்த்த பீதியிலே, பேதி ஆகித்தான் பாலா "நான் கடவுள்" படத்துல இருந்து அஜீத்தை தூக்கிட்டதா ஒரு பேச்சு.

இதுக்கு அடுத்து நடந்ததுதான் பெஸ்ட் காமெடி.அடுத்த படம் "தர்மபுரி" அதுவும் யாரு கேப்டன் விஜயகாந்தை வச்சு. "சனி தனியா வந்தாலே சமாளிக்க முடியாது.இங்க துணைக்கு ஆள் கூட்டிக்கிட்டு வருதே"னு எங்களுக்கு கண்ணெல்லாம் இருண்டுடுச்சு.ஆனா இந்த படம் கேப்டனோட அரசியல் வாழ்க்கையில் ஒரு பெரிய திருப்பு முனையா அமைஞ்சது.இனி இவன விட்டா இது மாதிரி நிறைய படம் நடிச்சு நம்மளை கொன்னுடுவான்னு மக்கள் உஷாராகி பேசாம இவரை M.L.A ஆக்கிட்டா படத்துல நடிக்க மாட்டார் நம்ம எஸ்கேப் ஆயிடலாம்னு ப்ளான் பண்ணி வோட்டு போட்டு ஜெயிக்க வச்சுட்டாங்க.இந்த உண்மை புரியாம கேப்டன் இப்பவும் போறவங்க வர்றவங்க கிட்ட எல்லாம் "என் அரசியல் வாழ்க்கையை தூக்கி விட்டதே தம்பி பேரரசுதான்னு கண்ணு கலங்கி சொல்லிக்கிட்டு இருக்காரு.

நம்ம ஆளை பத்தி இன்னும் நெறய சொல்லிக்கிட்டே போகலாம்.ஏதோ இப்போ தயாரிப்பாளர்கள் கொஞ்சம் சுதாரிச்சு கொஞ்ச நாளா இவர் படம் எதுவும் வராம நாட்டுல அமைதி நிலவுது.இருந்தாலும் இவர் கலைச்சேவை என்னோட வேற ஒரு பதிவுல சொன்ன மாதிரி "அரச்ச மாவை அரைப்போமா,தொவச்ச துணிய தொவைப்போமா" லெவல்ல நடந்துகிட்டுதான் இருக்கு. இதனால சகலமானவர்களுக்கும் தெரிவித்து கொள்வது என்னவென்றால் பேரரசு படம்னா அந்த படம் ஓடுற தியேட்டர் பக்கம் சூடம் காட்டி, தேங்காய் ஒடச்சு, பெரிய கும்பிடா போட்டுட்டு அப்படியே ஓடியே போயிடுங்க.மீறி படம் பாக்க போனா உங்க உயிருக்கோ,மனநல,குணநல மாறுதல்களுக்கோ யாரும் உததரவாதம் இல்லை.

ஆஸ்திரேலியாவுக்கு தோப்பு!!

தலைப்பை தப்பா எழுதிட்டானோன்னு நினைக்காதீங்க.சரியாதான் இருக்கு. ஏதோ ஒரு புது படத்துல சொன்ன மாதிரி " ஒண்ணு வாங்கினா அது ஆப்பு வரிசையா வாங்கிக்கிட்டே இருந்தா அது தோப்பு". ஆஸ்திரேலியாவை பத்து நாளைக்கு முன்னாடி இங்கிலாந்துகாரங்க அசிங்கப்படுத்திட்டு போனா இந்த வாரம் நியூசிலாந்துகாரனுங்க குனிய வச்சு கும்மியே அடிச்சுட்டானுங்க. மூணு மாட்ச் வரிசையா ஜெயிச்சு chappel-hadlee series ஜெயிச்சுட்டாங்க.அதுவும் முந்தா நேத்து நடந்த மூணாவது மாட்ச்-ல ஜெயிக்கறதுக்கு 347 அடிக்கணும்னு ஆரம்பிச்சு நியூசிலாந்து 41/4 இருந்தாங்க.இதே நிலைமைல நம்ம இந்தியன் டீம் இருந்திருந்தா எதிரணி பாஸ்ட் பவுலர் வந்து "அண்ணாச்சி, பவுண்டரி லைன்ல இருந்த் மாங்கு மாங்குனு ஓடி வந்து போடறேனே,என்னைப் பார்த்தா பாவமா இல்லையா?.ஒரு ரன்னாவது அடிங்க.இல்லை பந்தையாவது தொடுங்க.இப்படி பேட்டை கொண்டு போய் முதுகுக்குப் பின்னாடி சொருகிகிட்டு நின்னா நல்லாவா இருக்கு?" அப்படின்னு காலை பிடிச்சு கெஞ்சற அளவுக்கு மட்டை போட்டிருப்பானுங்க.ஆனா நியூசிலாந்துகாரனுங்க கருப்பு சட்டை போட்ட எங்க ஊரு கருப்பசாமி மாதிரி பேயாட்டம் ஆடிட்டானுங்க. பந்து பவுண்டரிக்கும், சிக்ஸருக்கும் பறக்குது. இன்னைக்கு TV -ல ஹைலைட்ஸ் பார்த்தேன். ஆனா மேட்சே ஹைலைட்ஸ் மாதிரி தான் நடந்திருக்கு. கடைசியா 3 பந்து மிச்சம்
இருக்குறப்ப ஜெயிச்சுட்டானுங்க. நியூசிலாந்து கேப்டன் ஸ்டீபன் ப்ளெமிங்கை கையிலே பிடிக்க முடியலை. "உஸ்ஸ் அப்பா எத்தனை மாட்ச்தான் ஜெயிச்சுக்கிட்டே இருக்குறது " அப்படின்னு தலைவர் கைப்புள்ள ரேஞ்சுக்கு காலரை தூக்கி விட்டுகிட்டு திரியறார்.ஆனா ஆஸ்திரேலியா கேப்டன் ஹஸ்ஸி நெலமைதான் பாவம். ஓரமா குந்தி உக்காந்து "நான் என்னடா தப்பு பண்ணுனேன்?.ஏதோ ரிக்கி பாண்டிங் ரெஸ்ட்ல இருந்ததுனால தெரியாம கேப்டன் ஆயிட்டேன்.அது ஒரு குததமா?.ஏண்டா இந்த பச்சபுள்ளைய போட்டு இந்த அடி அடிச்சீங்க?.சின்னபுள்ள தனமா 336,346 எல்லாம் சேஸ் பண்ணுனா நாங்க எவ்வளவுதாண்டா ரன் அடிக்கிறது?"ன்னு ஒரே அழுவாச்சி.அதுவும் இல்லாம ஸ்டீபன் ப்ளெமிங்கை கப் வாங்குறப்போ போய் அவர் சட்டைய புடிச்சு "இங்க பாரு ,அடி வாங்குனது நானு,கப் எனக்குத்தான்"னு தகராறு
வேற. ஆஸ்திரேலியா கோச் "எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டே" ன்னு பேயடிச்ச மாதிரி உக்காந்து இருந்தாரு.






எப்படியோ இந்த உலகக் கோப்பைல நெறய காமெடி நடக்கப்போகுதுன்னு மட்டும் நல்லா தெரியுது.நம்ம இந்தியன் டீம் நெலமை எப்படி இருக்கப்போகுதுன்னுதான் தெரியலை. "இந்தியாவுக்கு கப்பா? ஆப்பா?"னு ஒரு ஸ்பெசல் ப்ரோக்ராம் நம்ம மந்திரா பேடியோட சேர்ந்து(ஹி.. ஹி.. ) செய்ய நான் ரெடி.யாராவது ஸ்பான்சர் பண்றீங்களா?.

Friday, February 16, 2007

ஹம்பி -காலத்தால் அழியா நகரம்

நீண்ட நாட்களுக்குப் பிறகு நண்பர்களுடன் ஒரு உல்லாசப் பயணம் செய்யுற வாய்ப்பு போன வார இறுதியில கிடைச்சது.மந்த்ராலயா,துங்கபத்ரா அணை,ஹம்பி இது மூணும் சேர்ந்த package trip தான் போனோம்.இருந்தாலும் இந்த டிரிப்-ல முழு கவனத்தையும் ஈர்த்தது ஹம்பிதான்.ஹரிஹரா மற்றும் புக்கா என்ற இரண்டு சகோதரர்களால் சுமார் 1258-1336 ல் துங்கபத்ரா நதியின் கரையில் நிறுவப்பட்டு பின்பு கிருஷ்ணதேவராயர் என்கிற சக்ரவர்த்தியின் ஆட்சியின் போது பட்டொளி வீசிப் பறந்த விஜயநகர சாம்ராஜ்ஜியத்தின் தலைநகர் ஹம்பி. அந்த காலத்தில் நமது மக்கள் எப்படி வாழ்ந்திருக்கலாம் என்கிற நமது கற்பனைக்கு ஒரு வடிவம் கொடுப்பதுடன், எப்படி எல்லாம் வாழ்ந்திருக்கிறார்கள் என்று நம்மை ஆச்சரியத்திலும் ஆழ்த்தும் ஒரு நகரம் இப்பொழுது அங்கு இருப்பது காலம்,பருவநிலை மாற்றங்கள்,அயல்நாட்டு படைஎடுப்பாளர்கள் போன்ற பல்வேறு காரணிகள் விட்டு வைத்திருக்கும் எச்சங்கள்தான்.ஆனால் இவையே சரித்திரத்தின் எண்ணில் அடங்கா பக்கங்களில் ஒரு சிலவற்றை நம்மை கை பிடித்து அழைத்து சென்று காட்ட போதுமானதாக உள்ளது.அதுவும் சூரிய அஸ்தமனத்தின் போது இந்த நகரம் மற்றும் அதன் கலை அழகை கண்டு ரசிக்க கண் கோடி வேண்டும்.


நாங்கள் அங்கு பார்த்த சில சரித்திர சான்றுகளைப் பற்றிய சுருக்கமான தொகுப்பு கீழே காண்பது:

ஹேமகூட கோவில்கள்





ஹொய்சாளர்கள் முறையில் கட்டப்பட்டு ஜைன முறை கோபுரங்கள் உடையவை.ஒரே கோவிலில் சிவன்,விஷ்ணு இரண்டு கடவுள் ஆராதனைகளும் நடந்திருக்கிறது.இந்த கோவிலில் மூன்று கர்ப்பகிரகங்கள்.ஆனால் கோவிலின் உள்ளே செல்ல ஒரு வழி.

விருபாக்க்ஷா கோவில் :




சிவன் கோவில்.மூன்று வெவ்வேறு கட்டிடக்கலை அமைப்புகளில்(திராவிட , விஜயநகர , சாலுக்கிய) கோபுரங்கள் கொண்ட மிகப் பெரிய கோவில்.இங்கு ஒரே கர்ப்பகிரகம்.ஆனால் கோவிலின் உள்ளே செல்ல மூன்று வழி.


உக்கிர நரசிம்மர் :


22 அடி உயரமுள்ள ஒரே கல்லில் செதுக்கப்பட்ட சிற்பக்கலை அதிசயம்.எப்படி செதுக்கியிருப்பங்கன்ணு நானும் ரொம்ப நேரம் யோசிச்சேன்.ஊஹூம் நம்ம அறிவுக்கு எட்டலை.

விட்டலா கோவில் :

கிருஷ்ணர் கோவில்.இங்க இருக்கிற இசைத் தூண் மண்டபமும், கல் ரதமும் உலகப் புகழ் பெற்றவை.அதிலும் இந்த கல் ரதம் அம்சம்.




லோட்டஸ் மஹால்:


அந்த காலத்துல ராணிகள் அந்தப்புரம்.இதில் மண் குழாய்கள் மூலம் தண்ணீரை சுற்றி வர செய்து ஒரு மாதிரி உள்ளே எல்லாம் குளுமையாக வைத்திருக்கிறார்கள். அந்தக் கால ராஜாவா இருந்தாலும் நம்மள மாதிரி ஆளா இருக்கார்.தாய்க்குலத்துக்கு மட்டும் எல்லா வசதியும் செஞ்சு குடுத்திருக்கார்.



நிலக்கடலை விநாயகர் :

என்னடா பேரு ரொம்ப வித்தியாசமா இருக்கேனு நெனைக்காதீங்க.இது உள்ளூர் மக்கள் வச்ச பேரு.18 அடி உயரம் உள்ள ஒரே கல்லில் செதுக்கப்பட்ட மிக அருமையான சிலை.பார்த்தவுடன் பிரமிக்க வைத்த ஒன்று. ஒரு blog-ல 5 படத்துக்கு மேலே போட முடியாதுங்கறதால மத்த படம் எதுவும் போட முடியலை



புஷ்கரணி:

இது நீங்க நெறய படத்துல பார்த்திருக்கலாம்.நெறய படிக்கட்டுகள் கொண்ட பூஜைக்காக மட்டும் தண்ணீர் எடுக்க பயன்பட்ட புனிதக் குளம்.

இன்னும் யானை லாயம்,மன்னர் அமர்ந்த துலாபாரம்,கிருஷ்ணர் கோவில்,புரந்தர மண்டபம்..... இப்படி நிறைய இடங்கள் பார்த்தோம்.எல்லாத்தையும் முழு விவரங்களோட படம் போட்டு எழுதினா டூரிஸ்ட் கைட் மாதிரி ஆயிடும்.(இப்பவே கொஞ்சம் அப்படித்தான் இருக்குன்னு சொல்லப்படாது) .

sight seeing ( இது வேற.நாம எப்பவும் பண்ற sight seeing :-)) வேற) முடிந்து திரும்ப பெங்களூருக்கு பஸ்ல திரும்ப வரும்போது,வேகமா ஓடற பஸ்ல மிதமான இருட்டுல சொகமா ஜன்னல் சீட்ல காத்து வாங்கிட்டு வந்தப்போ பார்த்த இடங்களின் அழகிலிருந்து மீண்டு மற்ற விசயங்களை நம்ம அறிவு யோசிக்க ஆரம்பித்தது(எப்பவும் போல).


துங்கபத்ரா நதியோரம் உள்ள ஒரு அருமையான நகரம். நிச்சயம் நல்ல முறையில் விவசாயம் நடத்தி இருக்க வேண்டும்.கட்டிடக் கலையின் சிறப்பு ,ஊரை பிரித்திருக்கும் முறை, தொழில்நுட்ப அறிவு(விருபாக்க்ஷா கோவில் கோபுர பிம்பம் வேறொரு இடத்தில் ஒரு சிறிய துளை மூலம் தலைகீழாக நாள் முழுவதும் விழுவது,பாதாள சிவன் கோவிலில் தண்ணீர் சென்று வர செய்திருக்கும் வசதிகள், அந்தப்புரம் எப்பொழுதும் குளிர்ச்சியாக இருக்க மண் குழாய்களில் தண்ணீர் சுற்றி வர செய்திருப்பது ,இன்னும் இப்படி நிறைய..), அனைத்து சமயங்களையும் ஆதரித்து இருப்பது (சிவனுக்கு விருபாக்க்ஷா கோவில்,விஷ்ணுவுக்கு விட்டலா கோவில், ஹேமகூட கோவில்களில் ஜைன கோபுரங்கள்,ராணி அந்தப்புரத்தில் இஸ்லாமிய கட்டிடக்கலை...), சட்டம் ஒழுங்கு(ஏழு விதமான அங்காடி வீதிகளுக்கும் கதவோ மறைப்புகளோ இல்லாதது ,குற்றம் செய்பவர்களை கை கால்களை பிணைத்து தண்டிக்க ஒரு இடம்) , சிறந்த பொழுதுபோக்கு அம்சங்கள் (கோவில்களில் இசை மற்றும் நாட்டிய அரங்கம்,நவமி பண்டிகை,புரந்தர தாசர் போன்ற கவிகள் ), சிறந்த பொருளாதாரம்(காவல் நிறைந்த நாணய சாலை,முத்து ,ரத்தினம் ,தங்கம், மிளகு, பாக்கு .. இப்படி ஏழு கடைவீதிகள், வெளிநாட்டு வர்த்தகர்களுடன் வியாபாரம்), பெண்களுக்கு மரியாதை ,பாதுகாப்பு ,சிறந்த வீரம்,கல்வி....... இன்னும் வேறென்ன வேண்டும் .They must have lived a complete and happy life.

மிக நீண்ட காலத்துக்கு முன்பே நிச்சயமாக மிகச் சிறப்பாகவும்,நாகரிகத்துடனும் வாழ்ந்திருக்கிறார்கள்.அவர்கள் விட்டுச் சென்ற இடத்திலிருந்து நாம் சரியாக தொடர்ந்திருக்கிறோமா தெரியவில்லை.எனக்கு ஏனோ, நாம்தான் வரலாற்றிலிருந்து சரியாக பாடங்களை கற்று கொள்ளவில்லையோ என்று இப்பொழுது தோன்றுகிறது. ஹம்பி கொடுத்த ஆச்சரியமும் வியப்பும் அகல இன்னும் சிறிது நாட்கள் ஆகும் .

Thursday, February 15, 2007

Globalising Indian companies

The decision of the Aditya Vikram Birla group's flagship company Hindalco Industries to acquire the U.S.-based aluminum products maker, Novelis Inc at an estimated $6 billion is an enormously significant development. Coming less than a fortnight after the Tatas closed their nearly $12 billion deal with Corus, the AV Birla group's move reinforces a trend that is making a large number of Indian companies world champions in their fields through acquisitions. The significance of Indian companies taking over European and American companies and reaping substantial synergies in their global operations can hardly be overstated. Indian MNC's are now gaining the willingness and ability to reap the rewards of globalisation. Having first met the challenges of fierce global competition with limited resources within the country, they are now taking the battle into the most advanced markets. While earlier many Indian companies were targets for takeovers from abroad, today they have become acquirers themselves. After the acquisition, Hindalco's turnover will almost double and the AV Birla group will be poised to enter the list of Fortune 500 companies. That would fit into the vision of the late Aditya Vikram Birla, who more than 35 years ago led his group into becoming the first truly Indian multinational.

From the outside, interest in the Indian economy continues to rule high and the British telecom giant Vodafone is all set to own a majority stake in Hutch-Essar, India's fourth largest mobile telephone company. The protracted battle to acquire the 67 per cent stake held by the Hong Kong-based Hutchison Telecom and the mind-boggling valuations — the Indian company has been estimated to have an enterprise value of $19 billion — speak of the attraction the size of the Indian market holds. Many of the industries and services that are today flourishing and defining the country's outward thrust did not exist in the pre-reform era. Mobile telephony has been one of the great success stories, with the number of connections — currently placed at round 156 million — expected to grow exponentially to reach 210 million by 2008. Opinions may differ on whether in both the transactions — Hindalco's as well as Vodafone's acquisitions — the price paid was right and whether the projected benefits will in fact accrue. Yet, the bigger picture should not be lost sight of. As Mr. Kumaramangalam Birla pointed out recently "India is back in the stream of global consciousness." A great deal of credit should go to the spirit of entrepreneurship of Indian businessmen and their willingness to think big.

கெளம்பிட்டாய்ங்கைய்யா கெளம்பிட்டாய்ங்க



நேத்தே இந்த பதிவு போடணும்னு நெனச்சேன்.ஆனா நம்மதான் ஜமுக்காள சோம்பேறிங்க ஆச்சே.அதுதான் இன்னைக்கு போடும்படி ஆயிடுச்சு.

இது நாம:

FEB 14 காதலர் தினமாம்.இதெல்லாம் ஒரு பொழப்பானு இவனுங்களை பார்த்து கேக்கலாம்னு நெனக்கிறேன்.அவன் அவனுக்கு ஆயிரம் வேலை இருக்கு.அதை விட்டுப்புட்டு இதுக்குன்னு ஒரு நாள் ஒதுக்கி அதை கொண்டாடுறானுங்க. கூட்டம் கூட்டமா ஜோடி போட்டுட்டு நம்ம வயித்தெரிச்சலை கிளப்புறதுக்கு கெளம்பிடறானுங்க.ஒரு ரோஜா பூ விலை 30 ரூபாயாம்.என்ன கொடுமை சரவணன் இது?. எந்த ஒரு காதலன்/காதலிக்கு தங்களது ஜோடிகளை பார்த்த நாளோ இல்லைனா அவங்ககிட்ட காதல் சொல்லி அதை ஏற்றுக் கொண்ட நாளோ வேணா அவங்களுக்கு முக்கியமான நாளா இருக்கலாம்.அதை கொண்டாடுறதுல ஒரு நியாயம் இருக்கு. அது எப்படி ஒரு குறிப்பிட்ட நாளை பொதுவா வச்சு அதை காதலர் தினமா கொண்டாடலாம்.உலகத்துல கல்யாணம் ஆனவங்க எல்லோரும் ஒரே நாளுல Anniversary கொண்டாடாமுடியுமா?.(சே என்ன ஒரு லாஜிக்.பின்றியேடா). அதுவும் St.Valentine ஒரு சாமியார்.அவர் காதல் செஞ்சதாவும் தெரியலை.அவர் பேருல இதை கொண்டாடுறதுக்கு ஒரு சரியான காரணமும் இல்லை.இதெல்லாம் மேற்கத்திய கலாசாரத்தின் தேவை இல்லாத பாதிப்பு.பூக்கள்,பரிசு பொருள்கள்,வாழ்த்து அட்டைகள் இதெல்லாம் விக்கிறவங்க நெறைய விக்கிறதுக்கு செய்யுற வியாபார தந்திரம். இதெல்லாம் எனக்கு சுத்தமா பிடிக்காது.இருந்தாலும் சமூக நாகரீகம் கருதி அனைவருக்கும் எனது காதலர் தின நல்வாழ்த்துக்களைத் தெரிவிச்சுக்கிறேன்.வேணும்னா PKS கமல் மாதிரி எல்லோரும் அவங்க மனசுக்கு பிடிச்சசவங்களை காதலிச்சு,கல்யாணம் பண்ணிக்கிட்டு ,குழந்தைகள் எல்லாம் நல்லா படிச்சு வேற வேற நாட்டுல வேலைக்கு போகறேன்னு அடம் பிடிக்கிறப்போ எல்லா நாடு consulate வாசல்லயும் வெயில்ல கெடந்து கஷ்டப்படுங்கண்ணு வஞ்ச புகழ்ச்சி திட்டு வேணும்னாலும் குடுக்கறேன்.நல்லா இருங்க.

இது நம்ம மனசாட்சி:

டேய் டேய் அது எப்படிடா நல்லவன் மாதிரியே ஆக்ட் குடுக்கறீங்க?.ரோட்ல ஒரு பிள்ளைய போக விடுறதுல்ல.மொறச்சு மொறச்சு பார்க்குறது. மாசத்துக்கு ஒரு நடிகைக்கு ரசிகர் மன்றம் வைக்கிறது.இதுல டயலாக் வேற."நாய்க்கு வேலை இல்லை ஆனா நின்னு பேச நேரம் இல்லை"-ங்கற மாதிரி ஒரு பிள்ளையும் உன்னை பார்க்கலைங்கற உண்மையை மறைக்க தம் கட்டி பக்கம் பக்கமா அடுத்தவனை குத்தம் சொல்லி blog எழுத வேண்டியது.என்னா வில்லத்தனம்!.போடா போடா போய் உருப்படியா ஏதாவது வேலை இருந்தா பாரு.

இது நாம:

அட விடு மனசாட்சி.இதெல்லாம் நமக்கு புதுசா என்ன. நாம நாலு பேரை திட்டுறதுதான்.நாலு பேரு நம்மளை ரொம்ப அசிங்கமா திட்டுறதுதான்.பொது வாழ்க்கையில இதெல்லாம் சாதாரணம்.அதோ அந்த பக்கம் சூப்பரா ஒரு பொண்ணு போகுது பார்.அதை கவனிப்போம்.வுடு ஜூட்.

இது நம்ம மனசாட்சி:


ஆஹா கெளம்பிட்டான்ய்யா கெளம்பிட்டான்.

Monday, February 12, 2007

Aero show 2007

போன வியாழக்கிழமை நாங்க(நான்,கிருஷ்ணமணி,ஹரி)மூணு பேரும் Aero show 2007 போயிருந்தோம்.நமக்கு இந்த Tom clancy புஸ்தகங்கள் படிக்க ஆரம்பிச்சதில இருந்து fighter planes மேல ஒரு ஆர்வம் அதுவும் இந்த தடவை ரஷ்யா தயாரித்து நமது நாட்டில் upgrade செய்யப்பட்ட su-30MKI மட்டுமில்லாமல் அமெரிக்கத் தயாரிப்பான F-16 fighting falcon,F-18 super hornet,ஸ்வீடன் நாட்டு தயாரிப்பான Gripen மற்றும் ரஷ்யாவின் புதிய MiG-35 போன்ற பெருந்தலைகளும் இருந்ததால் ரொம்ப ஆர்வத்தோட போனேன்.ஆனா நாம சந்தோஷமா இருந்தாதான் நாட்டுல நிறைய பேருக்கு பிடிக்காதே.நுழைவுச்சீட்டுல கால நியமங்கள்(Time duration-என்னே தமிழறிவு!) சரியா போடாததால போனதே அரை மணி
நேரம் லேட்.இதுல ஒரு intermediate Jet trainer -க்கு ஒரு சின்ன விபத்து நடந்து அதுல ஒரு முக்கால் மணி நேரம் லேட்.கடைசியா உள்ளத்தை அள்ளித்தா படத்துல செந்தில் சொல்ற "டெம்போ எல்லாம் வச்சு கடத்தியிருக்கோம் கொஞ்சம் பார்த்து போட்டுக் குடுங்க" மாதிரி "40 கிலோமீட்டர் Pulsar எல்லாம் ஓட்டிக்கிட்டு வந்திருக்கோம் சார்-னு" நாங்க புலம்பறதை கேட்டுட்டாங்களோ என்னமோ ஒரு வழியா ஆரம்பிச்சாங்க.SU-30MKI-ல நம்ம பைலட் நிறைய சாகசமெல்லாம் செஞ்சு காட்டினார்
Su-30 MKI



அடுத்து ஸ்வீடன் நாட்டு தயாரிப்பான Gripen fighter வந்தது.அம்சம்.400 மீட்டர்ல Takeoff ஆகிடுது. Very much maneuverable and flexible.SU-30MKI,Gripen இது ரெண்டும் பறக்கும்போதும்,Takeoff சமயத்துலயும் குடுத்த sound effect சூப்பர்.நம்ம உடம்பு ஒரு நிமிஷம் ஆடிப் போயிடுது.அதுக்கப்புறம் நம்ம சூர்யகிரண் அணியும்,அதுக்கடுத்து ஆகாச கங்கா அணியும் Aerobatics செஞ்சு காட்டினாலும் அதுல அவ்வளவா மனம் லயிக்கல.சூர்யகிரண் அணியில இருக்கறது எல்லாம் Jet trainers.அதுல Full fledged Fighters அளவுக்கு sound effect வராது.கர்ஜனை இல்லாத சிங்கம் நல்லாவா இருக்கும்.சரி அடுத்து நம்ம அயிட்டங்கள் எல்லாம் வரும்-னு உட்கார்நதிருந்தா ஊஹூம் ஒண்ணுநம்ம நாட்டு தயாரிப்பான Tejas-LCV(Light combat vehicle) வரும்னு பார்த்தா அதுவும் இல்லை.show முடிஞ்சு போச்சுன்னு ஒரு அக்கா அறிவிப்பு செய்யுது.அட லகுட பாண்டிகளா இதே ஆர்வத்தை show நடத்துறதுலயும் காட்டியிருக்கலாமேடானு மொணங்கிட்டே வீட்டுக்கு வந்து சேர்ந்தோம்.கிருஷ்ணமணி வீட்டுக்கு வந்ததுக்கு அப்புறமும் புலம்பிக்கிட்டு இருந்தான்.நம்ம நாட்டு தயாரிப்பான Tejas-LCV(Light combat vehicle) வரும்னு பார்த்தா அதுவும் இல்லை.நான் இன்னைக்கு எப்படியும் F-16,MiG-35 ரெண்டையும் பார்த்தே ஆகறதுன்னு Internet-ல புகுந்து image download செஞ்சு பார்த்துட்டேன்.நம்ம யாரு,சிங்கம்ல.உங்கள் பார்வைக்கு அவை கீழே:

MiG-35





F-16 Fighting Falcon


F-18 Super Hornet



Gripen

சரி குடுத்த காசுக்கு Su-30,Gripen பார்த்த சந்தோஷத்திலயும்,அடுத்த நாள் ஹம்பி ட்ரிப் போற சந்தோஷத்தோடயும் நிம்மதியா படுத்துத் தூங்கியாச்சு.அடுத்த பதிவு ஹம்பி ட்ரிப் பத்தி.

Tuesday, February 06, 2007

IT-enabling to reduce corruption

Recently i read an article in "The Hindu" in which a house maid,who recently lost her husband,filed an application for Rs.200-a-month allowance in the taluk office under Vidhawa Vethana — the Karnataka Government’s social security scheme for widows. She was shocked when a government official demanded a bribe of Rs.150. When she offered Rs.50, the official shot back that he was not a “beggar!” Of course, he is! What else can he be? Before this, disgracefully,nurses in a government hospital in Bangalore demanded Rs.100 to 200 each time they shifted the housemaid’s husband, who was in severe trauma, on to the hospital bed! It is a disgrace that no one is spared from the cancer of corruption and moral bankruptcy.Public outcry against corruption is increasing but the impact is minimal. However, there appears some promise of reducing corruption through Information Technology-enabled services. IT is not a panacea but there is potential to minimise harassment of the kind the housemaid faced.

Andhra Pradesh government(To say correctly,Chandrababu naidu)introduced the concept of eSeva in 1999.It is an interesting insight into the impact of IT-enabled government services.eSeva is a public-private partnership programme to provide one-stop services,such as bill payment, and issue of licences, birth/death certificates, etc., to citizens. The actual delivery of services is done through private franchisees compensated on the basis of the volume of transactions. The incentives are structured to provide service with courtesy and minimal delay. Of course,eSeva is still a long way from reaching all the citizens. However, its progress since 1999 has been remarkable. Over 61 million transactions have been processed through eSeva centres. It is believed that eSeva has improved service delivery and citizen satisfaction,and reduced corruption.The lesson is that there are opportunities to reduce corruption by reengineering and digitising government processes, minimizing direct contacts between the government and citizens, establishing appropriate controls and audit, institutionalising transparency and accountability, and privatizing government-citizen interactions with appropriate incentives and controls.

There is a business jargon “Don’t automate, Obliterate”.Firms should obliterate the existing ways of doing business, simplify processes, eliminate non-value added tasks, and innovate to improve speed, quality, and service. Simply automating the existing inefficient processes with IT provides no meaningful productivity improvements.On similar lines, to reduce corruption in government services, we need to eliminate unnecessary government-citizen interactions! The potential for corruption increases when there are face-to-face interactions.Electronic interaction can obliterate them and leave a trail for potential audit. But the focus should not be on IT itself, but on how the government carries out various activities,i.e processes. IT is a means and not an end in itself. Research suggests that the value from IT comes mostly from process improvement and incentive alignment. Thus governments may need to give more importance to processes than to IT itself.Complex processes with enormous paperwork increase the potential for corruption.The more the paperwork and number of steps, greater are the opportunities for brokers (consultants?!) to step in to get any work done in government offices. Some of these brokers are hand-in-glove with officials and become conduits for organised corrupt practices.Performance metrics have less meaning since blame is passed on to others.Further, recognising the inefficiencies or potential loopholes, private citizens may themselves become party to corrupt practices.

One of the greatest benefits of IT is enforcing queue in the system. A well-known political scientist once said queues inherently represent equality and when people do not perceive equality, they break queues. Sadly, people with money, connection, or power perceive others to be unequal and tend to break queues more readily! IT will force applications to be processed in the order of arrival. It can enforce multiple queues with different priority levels based on the willingness of applicants to pay a premium for the service. In a non-IT system, willingness to pay or accept payment is played out through bribes. One can debate whether government services should have different levels of priorities at all since the system will be inherently biased towards the wealthy.However when processes are simplified,controls may be compromised. Fortunately,digitisation enables us to enforce rules and bring transparency. If a case is not processed within a certain time, the system can automatically trigger a notification for higherups.What if the higher-ups are corrupt? The government can make the status transparent so that non-governmental organizations or the media can report delays.

In fact, citizens should be able to post delays and corrupt activities for the public to view. The government must provide a conduit for people to voice concerns, corruption, or compliments.Of course, corrupt citizens can use this conduit to abuse honest officials and, therefore, there is need for checks and balances.Controls and metrics are necessary and the government has an obligation to make high-level aggregate information public. For instance, a government dashboard for each organisation may publicly list the number of cases in the queue, average processing time and its distribution, and the number of delayed cases. Organisational leaders must be evaluated on these metrics. These metrics can be derived from the system automatically.So there is little leeway in tampering with data.


Need for political will and vision But the above is easier said than done.Even in the corporate world, a large majority of reengineering projects have failed for mostly non-technical reasons. There will be significant resistance from unions, governmental agencies, and powerful brokers who benefit from inefficiencies and have vested interest.Service transformation will impact power structure, employee morale and skills, departmental boundaries, job security, information control, and incentive structure.Therefore, much like in a business environment where top management support impacts the success of reengineering and IT initiatives, there is need for strong political will and vision to make this transformation.Of course, there are economic issues to be considered. IT is expensive to create and manage. Often, the focus is upfront cost in creating information systems. However,over 70 per cent of the life-cycle cost of the system goes into maintenance.

Furthermore,a large fraction of the population has no education or access to interact electronically.Thus, governments may run an expensive system to meet the demands of a small population and a parallel expensive, manual,and inefficiency-riddled system for the masses.In the short run, the cost will go up. Therefore,governments must pursue public-private partnership where the private partner will invest and share some risks and reach the citizens with appropriate incentives,checks and balances. This does not mean that the governments outsource social responsibility to the private sector. But this is a way to bring market efficiency and better accountability. It is relatively easier to address inefficiencies with private agencies than to deal with corrupt government officials.Further, privatising the actual delivery will eliminate the main source of corruption — that is, government-citizen face-to-face interaction.

Friday, February 02, 2007

அழிந்து வரும் சினிமா தியேட்டர்கள்

தலைப்பை பார்த்துட்டு என்னடா sun tv செய்தியிலே சிறப்புப் பார்வை மாதிரி இருக்கேனு பயப்படாதீங்க.விஷயம் அதுதான் என்றாலும் நான் ரொம்ப serious ஆக எல்லாம் பேச மாட்டேன்.நண்பர்களுக்கு தெரியும் நான் இப்போ இருப்பது பெங்களூரில். கடந்த 3-4 வருடங்களுக்குள் நான் இருக்கும் B.T.M மற்றும் அதைச் சுற்றி உள்ள ஜெயநகர் போன்ற இடங்களில் எனக்கு தெரிந்து 4-5 தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளன.உதாரணத்துக்கு ஜெயநகர் 4th block புட்டண்ணா தியேட்டர், ஜெயநகர் 3rd block நந்தா தியேட்டர்,திலக் நகர் ஸ்வாகத் தியேட்டர்,ஜெயதேவா hospital முன்பு இருந்த பெயர் தெரியாத தியேட்டர் இப்படி நிறைய சொல்லலாம். இத்தனைக்கும் ஜெயநகர் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள,வியாபார ஸ்தலங்கள் அதிகம் உள்ள நகரத்தின் மையப் பகுதி.நான் சொல்லும் இந்த தியேட்டர்கள் எல்லாம் பெங்களூரில் நான் அடிக்கடி சென்று வரும் ஒன்றிரண்டு இடங்களில் மட்டும் உள்ளவை.பெங்களூரின் பிற பகுதிகளில் நிலைமை எப்படி என்று தெரியவில்லை


பெங்களூர் போன்ற மிகப் பெரிய,பொழுது போக்குகளுக்கு விரும்பி செல்லும் மக்கள் அதிகம் உள்ள மாநகரங்களிலேயே தியேட்டர்களுக்கு இந்த நிலைமை என்றால் மற்ற சிறு நகரங்களிலும்,கிராமங்களிலும் இருக்கும் நிலைமையை யார்,எப்படி சமாளிப்பது?.செயற்க்கைக் கோள் இணைப்புகள்,தொலைக்காட்சி மற்றும் முறையற்ற VCD விநியோகங்கள் இதற்கு ஒரு காரணமாக இருந்தாலும் எனக்கு வேறொரு மிக முக்கியமான காரணமும் தெரிகிறது.

அது "படங்களின் தரம்".யோசித்து பாருங்கள் தற்போது பொங்கலுக்கு வெளி வந்து இருக்கும் "ஆழ்வார் ",மற்றும் சில நாட்களுக்கு முன் வெளிவந்த "வல்லவன்" போன்ற படங்கள் வந்தால் யார்தான் அப்புறம் சினிமா தியேட்டருக்கு போய் படம் பார்ப்பார்கள்.படங்களில் பாதி நேரம் கதாநாயகன் வந்து "நான் இறங்கி போறவன் இல்லைடா ஏறிப் போறவன்" என்றோ (தியேட்டர்-ல இருப்பவர்கள் "எப்படியாவது போ ஆனா சீக்கிரம் போடா" என்று சொல்வார்கள்),இல்லை "வாழ்க்கை ஒரு வட்டம்டா "என்று மிகப் பெரிய அறிவியல் உண்மைகளையோ சொல்லிக் கொண்டு இருந்தால் என்ன செய்வது.இதில் Matrix படம் வந்த பிறகு time slicing தொழில் நுட்பம் பயன்படுத்தி கதாநாயகன் ஒரு 30-40 பேரை பொறுமையாக வானில் நிற்க வைத்து சுற்றி சுற்றி அடிக்கிறார்.கூலி வேலை செய்யும் கதாநாயகர் வெளிநாடுகளில் duet பாடுகிறார்.நடுச்சாலையில் அனைவரும் சுற்றி நின்று பார்க்க குத்து டான்ஸ் ஆடி நமது மானத்தை வாங்குவது தனி சோகக்கதை. .


சிம்புவோ வல்லவன் படம் பார்க்க வந்தவர்களிடம் "யாரும் யாருக்கும் ஆப்பு வக்கிறது இல்லைடா ஆப்பு ஆங்கங்க இருக்கு நம்மளாதான் தேடிப் போய் உக்கார்றோம்" என்று வல்லவன் படம் திரை இடப்பட்ட தியேட்டர்களில் எல்லா இருக்கைகளிலும் ஆப்பு இருக்கு நீங்கதான்டா தேடி வந்து உக்காந்து இருக்கீங்க அப்படீன்னு சொல்லாம சொல்றார்.இந்த தனுஷ் பையன் "சூடானா
சுளுக்கெடுத்துருவேன் "- னு இலவச நாட்டு வைத்திய விளம்பரம் செய்யறான்.

அய்யா இந்த கதாநாயகர்கள் தொந்தரவுதான் தாங்க முடியலைனு பார்த்தா புதுசா ஒருத்தர்(இயக்குநர்/நடிகர் )வந்திருக்கார்.தொந்தரவு திலகம் "பேரரசு". திருப்பாச்சி,சிவகாசி,திருப்பதி,தர்மபுரி(இதில் நடித்த captain ஒரு Terror,அதை பத்தி ஒரு தனி சரித்திரமே இருக்கு .தைரியம் இருந்தால் இங்கே சொடுக்கி படிக்கவும்) போன்ற படங்களை எடுத்ததுடன் அந்த படங்களில் வந்து "punch dialogue " எல்லாம் பேசி நம்மை உடல் முழுதும் puncture செய்கிறார். திரைக்கு வரும் படங்களில் எல்லாம் கதாநாயகர்கள் அருவாள் எடுத்து கேள்வி நியாயமே இல்லாமல் எல்லோரையும் வெட்டி தள்ளுகிறார்கள்.இதில் போதாத குறைக்கு " வடு மாங்கா ஊறுதுங்கோ","அரைச்ச மாவை அரைப்போமா தொவச்ச துணியை தொவைப்போமா" என்று மிகச் சிறந்த தத்துவ பாடல்கள் வேறு(இதிலும் நமது பேரரசு மற்றும் இளைய தளபதி விஜய்யின் பங்களிப்பு அதிகம்).

நல்ல படங்கள் வருகின்றன.நான் இல்லை என்று சொல்லவில்லை."கண்ட நாள் முதல்","பிதாமகன் ","கஜினி" போன்ற சில அரிய படங்களும் ,கௌதம் மேனன்,மணிரத்னம் போன்ற சிறந்த இயக்குநர்களின் படங்களும் அவ்வப்போது வருகின்றன.சூர்யா,விக்ரம் இந்த விஷயத்தில் எவ்வளவோ பரவாயில்லை. இருந்தாலும் minumum guarantee என்று சொல்லக் கூடிய,போய் உட்கார்ந்தால் ஒரு இரண்டரை மணி நேரம் நம்மை entertain பண்ணக் கூடிய படங்களோ,படம் பார்த்து வெளி வரும்போது ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் படங்களோ மிகவும் குறைவு.

அப்படிப்பட்ட படங்கள் நிறைய வராதவரை,கதாநாயகர்கள் பன்ச் டயலாக் பேசி நம்மை புண்ணாக்குவதை நிறுத்தாத வரை,ஒரு குத்துப்பாட்டு கட்டாயம் வேண்டும் என்பதை மறக்கும் வரை ,இன்னும் இது போன்ற நிறைய "வரை"களை நமது படங்களில் இருந்து நீக்காத வரை இது போன்ற சினிமா தியேட்டர் மூடுவிழாக்களை நம்மால் நிறுத்த முடியாது.