பெங்களூரில் நேற்று மஞ்சு என்கிற 5 வயது குழந்தை நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த பொழுது தெரு நாய்களால் கடிபட்டு இறந்து விட்டது.கடந்த இரண்டு மாதங்களில் நடந்த இரண்டாவது துர்சம்பவம் இது. சென்ற முறை இது போன்ற சம்பவம் நடந்தவுடனேயே சுதாரித்திருக்க வேண்டிய அரசு எந்திரங்களும், அதிகாரிகளும் இதை பற்றி இன்னும் கவலைப்படாமலும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமலும் இருப்பது கவலை அளிப்பதாக உள்ளது.இதில் என்னை மிகவும் கோபப்பட வைப்பது இந்த மிருகநல ஆர்வலர்களின் வாதங்கள்தான்.தெரு நாய்களை கொல்லக் கூடாது.அவற்றுக்கு ஒரு துன்பமும் வரக்கூடாது என்று கோஷம் போட்டுக்கொண்டு உள்ளனர்.
கர்நாடக அமைச்சர் இறந்த குழந்தையின் பெற்றோர்களுக்கு ஒரு லட்சம் நிதி உதவி அளிப்பதாக சொல்லி உள்ளாரே தவிர தெருநாய்களின் தொல்லையை அழிக்க என்ன செய்ய போகிறார்கள் என்று ஒரு வார்த்தை சொல்லவில்லை.இன்னும் ரெண்டு நாட்களுக்கு செய்தி ஊடகங்களும் இதை பற்றி பேசி விட்டு நாளை ஏதாவது ஒரு நடிகையின் நாய்க்கு உடம்பு சரியில்லை என்றால் அதைப் பற்றி செய்தி எழுதப் போய்விடுவார்கள் . நேற்று அந்த குழந்தை பற்றி நானும் நண்பன் ஹரியும் பேசிக்கொண்டிருந்த போது ஹரி சொன்னான் "15 நாய்கள் கடிச்சிருக்கும் போது அந்த குழந்தைக்கு எப்படி வலிச்சிருக்கும்" .வேணாம்டா சாமி, நினைக்கவே ரொம்ப கஷ்டமா இருக்கு.அந்த குழந்தைக்கு என்ன தெரியும் பாவம்.டே அப்பா, மிருகநல ஆர்வலர்களே, தெருநாய்களை பத்தி கோஷம் போடுறதுக்கு முன்னாடி அந்த குழந்தையின் வலி பற்றியும், குழந்தையின் பெற்றோர்கள் இனி மேல் அனுபவிக்க போகும் இழப்பின் வலியையும் கொஞ்சம் யோசிச்சுட்டு கோஷம் போடுங்கப்பா.இல்லைனா தயவு செஞ்சு இந்த தெரு நாய்களை எல்லாம் உங்க வீட்டுக்கு எடுத்துட்டு போய் சந்தோசமா வளர்த்துக்கோங்க.ஆனா எல்லா நாய்களையும் கூட்டிட்டு போயிடுங்க.
சட்டப்படி பார்த்தாலும் இதே குற்றத்தை (குழந்தையை கொன்றதை) ஒரு மனிதன் செய்திருந்தால் அவர்களுக்கு நிச்சயம் மரண தண்டனை கொடுக்கலாம்.ஆனால் நாய்களை மட்டும் ஒண்ணும் செய்ய கூடாதாம்.மிருகநல ஆர்வலர்களுக்கு வேண்டுமானால் ஒரு குழந்தையின் உயிரும்,நாயின் உயிரும் சமமானதாக இருக்கலாம்.எனக்கு, ஒரு நாயின் உயிரும் மதிக்கத்தக்கதே என்றாலும் , ஒரு குழந்தையின் உயிருக்கு சமமானதல்ல. இத்தனை தெருநாய்களை பெருக விட்டு அதை வேடிக்கை பார்த்து கொண்டு இருக்கும் மாநகராட்சி மற்றும் அதன் ஊழியர்களும் இதில் மிக வன்மையாக கண்டிக்கப்பட வேண்டியவர்களே. தண்டிக்கப்பட வேண்டியவர்களும் கூட.
இதில் மக்களின் குற்றமும் உள்ளது(என்னையும் சேர்த்து).யாரும் தெருநாய்களின் தொந்தரவு பற்றி ஆரம்பத்திலேயே புகார் கொடுப்பதில்லை. மீண்டும் இப்படி ஒரு நிகழ்ச்சி நடப்பதற்க்கு முன் மக்களோ, மாநகாராட்சியோ, செய்தி ஊடகங்களோ,மிருகநல ஆர்வலர்களோ இதற்கு தயவு செய்து ஒரு தீர்வு கண்டுபிடித்து விடுங்கள்.இன்னொரு குழந்தையின் கடிபட்ட சடலத்தை செய்தித்தாளில் பார்க்கும் தைரியம் எனக்கு இல்லை.உங்களில் நிறைய பேருக்கும் இருக்காது என்று நிச்சயம் நம்புகிறேன்.
Showing posts with label அனுபவம். Show all posts
Showing posts with label அனுபவம். Show all posts
Friday, March 02, 2007
Thursday, February 22, 2007
ஆஸ்திரேலியாவுக்கு தோப்பு!!
தலைப்பை தப்பா எழுதிட்டானோன்னு நினைக்காதீங்க.சரியாதான் இருக்கு. ஏதோ ஒரு புது படத்துல சொன்ன மாதிரி " ஒண்ணு வாங்கினா அது ஆப்பு வரிசையா வாங்கிக்கிட்டே இருந்தா அது தோப்பு". ஆஸ்திரேலியாவை பத்து நாளைக்கு முன்னாடி இங்கிலாந்துகாரங்க அசிங்கப்படுத்திட்டு போனா இந்த வாரம் நியூசிலாந்துகாரனுங்க குனிய வச்சு கும்மியே அடிச்சுட்டானுங்க. மூணு மாட்ச் வரிசையா ஜெயிச்சு chappel-hadlee series ஜெயிச்சுட்டாங்க.அதுவும் முந்தா நேத்து நடந்த மூணாவது மாட்ச்-ல ஜெயிக்கறதுக்கு 347 அடிக்கணும்னு ஆரம்பிச்சு நியூசிலாந்து 41/4 இருந்தாங்க.இதே நிலைமைல நம்ம இந்தியன் டீம் இருந்திருந்தா எதிரணி பாஸ்ட் பவுலர் வந்து "அண்ணாச்சி, பவுண்டரி லைன்ல இருந்த் மாங்கு மாங்குனு ஓடி வந்து போடறேனே,என்னைப் பார்த்தா பாவமா இல்லையா?.ஒரு ரன்னாவது அடிங்க.இல்லை பந்தையாவது தொடுங்க.இப்படி பேட்டை கொண்டு போய் முதுகுக்குப் பின்னாடி சொருகிகிட்டு நின்னா நல்லாவா இருக்கு?" அப்படின்னு காலை பிடிச்சு கெஞ்சற அளவுக்கு மட்டை போட்டிருப்பானுங்க.ஆனா நியூசிலாந்துகாரனுங்க கருப்பு சட்டை போட்ட எங்க ஊரு கருப்பசாமி மாதிரி பேயாட்டம் ஆடிட்டானுங்க. பந்து பவுண்டரிக்கும், சிக்ஸருக்கும் பறக்குது. இன்னைக்கு TV -ல ஹைலைட்ஸ் பார்த்தேன். ஆனா மேட்சே ஹைலைட்ஸ் மாதிரி தான் நடந்திருக்கு. கடைசியா 3 பந்து மிச்சம்
இருக்குறப்ப ஜெயிச்சுட்டானுங்க. நியூசிலாந்து கேப்டன் ஸ்டீபன் ப்ளெமிங்கை கையிலே பிடிக்க முடியலை. "உஸ்ஸ் அப்பா எத்தனை மாட்ச்தான் ஜெயிச்சுக்கிட்டே இருக்குறது " அப்படின்னு தலைவர் கைப்புள்ள ரேஞ்சுக்கு காலரை தூக்கி விட்டுகிட்டு திரியறார்.ஆனா ஆஸ்திரேலியா கேப்டன் ஹஸ்ஸி நெலமைதான் பாவம். ஓரமா குந்தி உக்காந்து "நான் என்னடா தப்பு பண்ணுனேன்?.ஏதோ ரிக்கி பாண்டிங் ரெஸ்ட்ல இருந்ததுனால தெரியாம கேப்டன் ஆயிட்டேன்.அது ஒரு குததமா?.ஏண்டா இந்த பச்சபுள்ளைய போட்டு இந்த அடி அடிச்சீங்க?.சின்னபுள்ள தனமா 336,346 எல்லாம் சேஸ் பண்ணுனா நாங்க எவ்வளவுதாண்டா ரன் அடிக்கிறது?"ன்னு ஒரே அழுவாச்சி.அதுவும் இல்லாம ஸ்டீபன் ப்ளெமிங்கை கப் வாங்குறப்போ போய் அவர் சட்டைய புடிச்சு "இங்க பாரு ,அடி வாங்குனது நானு,கப் எனக்குத்தான்"னு தகராறு
வேற. ஆஸ்திரேலியா கோச் "எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டே" ன்னு பேயடிச்ச மாதிரி உக்காந்து இருந்தாரு.



எப்படியோ இந்த உலகக் கோப்பைல நெறய காமெடி நடக்கப்போகுதுன்னு மட்டும் நல்லா தெரியுது.நம்ம இந்தியன் டீம் நெலமை எப்படி இருக்கப்போகுதுன்னுதான் தெரியலை. "இந்தியாவுக்கு கப்பா? ஆப்பா?"னு ஒரு ஸ்பெசல் ப்ரோக்ராம் நம்ம மந்திரா பேடியோட சேர்ந்து(ஹி.. ஹி.. ) செய்ய நான் ரெடி.யாராவது ஸ்பான்சர் பண்றீங்களா?.
இருக்குறப்ப ஜெயிச்சுட்டானுங்க. நியூசிலாந்து கேப்டன் ஸ்டீபன் ப்ளெமிங்கை கையிலே பிடிக்க முடியலை. "உஸ்ஸ் அப்பா எத்தனை மாட்ச்தான் ஜெயிச்சுக்கிட்டே இருக்குறது " அப்படின்னு தலைவர் கைப்புள்ள ரேஞ்சுக்கு காலரை தூக்கி விட்டுகிட்டு திரியறார்.ஆனா ஆஸ்திரேலியா கேப்டன் ஹஸ்ஸி நெலமைதான் பாவம். ஓரமா குந்தி உக்காந்து "நான் என்னடா தப்பு பண்ணுனேன்?.ஏதோ ரிக்கி பாண்டிங் ரெஸ்ட்ல இருந்ததுனால தெரியாம கேப்டன் ஆயிட்டேன்.அது ஒரு குததமா?.ஏண்டா இந்த பச்சபுள்ளைய போட்டு இந்த அடி அடிச்சீங்க?.சின்னபுள்ள தனமா 336,346 எல்லாம் சேஸ் பண்ணுனா நாங்க எவ்வளவுதாண்டா ரன் அடிக்கிறது?"ன்னு ஒரே அழுவாச்சி.அதுவும் இல்லாம ஸ்டீபன் ப்ளெமிங்கை கப் வாங்குறப்போ போய் அவர் சட்டைய புடிச்சு "இங்க பாரு ,அடி வாங்குனது நானு,கப் எனக்குத்தான்"னு தகராறு
வேற. ஆஸ்திரேலியா கோச் "எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டே" ன்னு பேயடிச்ச மாதிரி உக்காந்து இருந்தாரு.



எப்படியோ இந்த உலகக் கோப்பைல நெறய காமெடி நடக்கப்போகுதுன்னு மட்டும் நல்லா தெரியுது.நம்ம இந்தியன் டீம் நெலமை எப்படி இருக்கப்போகுதுன்னுதான் தெரியலை. "இந்தியாவுக்கு கப்பா? ஆப்பா?"னு ஒரு ஸ்பெசல் ப்ரோக்ராம் நம்ம மந்திரா பேடியோட சேர்ந்து(ஹி.. ஹி.. ) செய்ய நான் ரெடி.யாராவது ஸ்பான்சர் பண்றீங்களா?.
Saturday, January 13, 2007
ஒரு புரோட்டா திங்க முடியுதா இந்த ஊர்ல?.
நானும் இந்த பரந்த Bangalore- ல எவ்வளவோ இடத்துல முயற்சி செஞ்சு பார்ததுட்டேன்.நல்ல புரோட்டா சால்னா சாப்புடணும்னு. ஊஹூம்.நடக்குற காரியமா தெரியலை.இந்த பொன்னுசாமி,அண்ணாச்சி,மால்குடி,அய்யனார் இது மாதிரி கடைக்கு எல்லாம் போனா புரோட்டா குடுத்துட்டு தனியா gravy order பண்ணுங்கன்னு சொல்றாங்க.எங்கயாவது நடக்குமா இந்த அநியாயம்?.எங்க ஊருல எல்லாம் இந்த மாதிரி சொன்னா வெட்டு குத்து ஆகிப் போயிரும்.ஒரு புரோட்டா-வுக்கு சால்னா,ஆம்லெட் வாங்கினா ஸ்பெசல் குழம்பு,அதுக்கு அப்புறம் mutton இல்ல chicken வாங்கினா வருவல் குழம்பு,ஈரல் குழம்பு அப்படின்னு நாலு புரோட்டா வாங்கின புரோட்டாவுக்கு ஒரு குழம்பு வாங்கி சாப்பிட்ட பயக நாங்க.விதியேனு சிக்கன் குழம்பு வாங்கி சாப்பிட்டா அது சாப்பாட்டுக்கு போட்டு சாப்புடுற அளவுக்கு புரோட்டாவுக்கு நல்லா இல்லை."வெற்றி தோல்வி எல்லாம் வீரனுக்கு ஜகஜம்" அப்படின்னு நம்ம தலைவர் கைப்புள்ளை மாதிரி சொல்லிட்டு நமக்கு இந்த "speciality restaurant " எல்லாம் சரிப்பட்டு வராதுன்னு முடிவு பண்ணிட்டு நம்ம லோக்கல் B.T.M ,மாருதி நகர்ல சில கடையில முயற்சி செஞ்சு பார்த்தேன்.ஊஹூம் எல்லா இடத்துலயும் காய்கறி எல்லாம் போட்டு vegetarian குருமாதான் கெடைக்குது.அது நம்ம சால்னா மாதிரி இல்லை.சரி அப்படியே ஜெயா நகர், J.P.நகர் ,பசவனகுடி, V.V.புரம் அப்படினு போனா இந்த மாதிரி புரோட்டா கடைகளே இல்லை.நண்பர்களிடமும்,அன்பர்களிடமும் விசாரிச்சதில மத்த இடங்களிலும் கூட சிறப்பா ஒண்ணும் இல்லைனு தெரிஞ்சது.அட கொடுமைக்கு ஓசூர் போய் கூட இது வரைக்கும் ஒரு நாலு அஞ்சு எடததுல சாப்ட்டு பார்த்துட்டோம்."கொடுமை கொடுமைனு கோவிலுக்கு போனா அங்க ரெண்டு கொடுமை ஜிங்கு ஜிங்குனு ஆடிச்சாம்".அங்கயும் இதே கதைதான்.
புரோட்டா-ன்னா என்ன சாதாரணமான விசயமா?.ஒரு பெரிய குண்டா நெறய மாவு எடுத்து அதுல நடுவுல பெரிய ஏரி மாதிரி குழி தோண்டி அதுல எண்ணை (சில பேரு முட்டையும் ) விட்டு ஒரு அரை மணி நேரம் நல்லா பிசைஞ்சு வச்சுடணும்.அப்புறம் தான் முக்கியமான விசயமே.அதை சின்ன உருண்டையா திரட்டி உருட்டி "பெருமால் மஹாபலிக்கு குள்ளமானவரா இருந்து விஸ்வரூபம் காட்டியது மாதிரி" அந்த சின்ன உருண்டை மாவா இது அப்படினு வியக்கிற மாதிரி பெரிய ரோஸ்ட் தோசை அளவுக்கு வீசணும்.இதில் தான் புரோட்டா மாஸ்டரின் கைவண்ணமே தெரியும். அப்படி வீசுற அழகு இருக்கே.பார்க்க கண் கோடி வேணும். எவ்வளவு மெல்லிசாவும் பெருசாவும் வீசுறாங்களோ அந்த அளவு புரோட்டா மிருதுவாவும்,அடுக்குகளுடனும்(Layers) வரும்.அப்புறம் அதை கல்லில் போட்டு கருகாம எடுத்து நல்ல நாலு பக்கமும் வெறப்பு போக தட்டணும்.இல்லைனா சாமி குத்தம் ஆகிப் போயிடும்(அப்பதான் layers தெரியுங்கறது மற்றும் ஒரு காரணம்).இப்படி வர புரோட்டாவை சும்மா ரெண்டு கையாலயும் சின்ன சின்னதா பிச்சு போட்டு (ஊருல புரோட்டா கொண்டு வர்றவரே அந்த இலவச சேவையும் செய்வார்) அதுல சால்னா ஊத்தி சாப்புடற சுகம் இருக்கே.அடடா அடடா .இந்த புரோட்டாவுக்கு வீச்சு புரோட்டா,முட்டை புரோட்டா,கைமா புரோட்டா,கொத்து புரோட்டா,கறி புரோட்டா இப்படி இன்னும் நிறைய பங்காளிகள் இருக்காங்க .இருந்தாலும் வெறும் புரோட்டாவை பிச்சு போட்டு சால்னா ஊத்தி சாப்புட்டறதுதான் உச்ச பட்ச சுகம்.
இந்த Bangalore-ல ஒரு விசாரணை கமிஷன் வச்சாவது நல்ல புரோட்டா சால்னா எங்க கெடைக்குதுன்னு கண்டு பிடிக்ணும்பா.இல்லைனா "கோவில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம்" -னு நம்ம முன்னோர்கள் சொன்ன மாதிரி "நல்ல புரோட்டா சால்னா கிடைக்காத ஊரில் வேலை பார்க்க வேண்டாம்" -னு வேற ஊரை பார்க்க போயிரணும்.
புரோட்டா-ன்னா என்ன சாதாரணமான விசயமா?.ஒரு பெரிய குண்டா நெறய மாவு எடுத்து அதுல நடுவுல பெரிய ஏரி மாதிரி குழி தோண்டி அதுல எண்ணை (சில பேரு முட்டையும் ) விட்டு ஒரு அரை மணி நேரம் நல்லா பிசைஞ்சு வச்சுடணும்.அப்புறம் தான் முக்கியமான விசயமே.அதை சின்ன உருண்டையா திரட்டி உருட்டி "பெருமால் மஹாபலிக்கு குள்ளமானவரா இருந்து விஸ்வரூபம் காட்டியது மாதிரி" அந்த சின்ன உருண்டை மாவா இது அப்படினு வியக்கிற மாதிரி பெரிய ரோஸ்ட் தோசை அளவுக்கு வீசணும்.இதில் தான் புரோட்டா மாஸ்டரின் கைவண்ணமே தெரியும். அப்படி வீசுற அழகு இருக்கே.பார்க்க கண் கோடி வேணும். எவ்வளவு மெல்லிசாவும் பெருசாவும் வீசுறாங்களோ அந்த அளவு புரோட்டா மிருதுவாவும்,அடுக்குகளுடனும்(Layers) வரும்.அப்புறம் அதை கல்லில் போட்டு கருகாம எடுத்து நல்ல நாலு பக்கமும் வெறப்பு போக தட்டணும்.இல்லைனா சாமி குத்தம் ஆகிப் போயிடும்(அப்பதான் layers தெரியுங்கறது மற்றும் ஒரு காரணம்).இப்படி வர புரோட்டாவை சும்மா ரெண்டு கையாலயும் சின்ன சின்னதா பிச்சு போட்டு (ஊருல புரோட்டா கொண்டு வர்றவரே அந்த இலவச சேவையும் செய்வார்) அதுல சால்னா ஊத்தி சாப்புடற சுகம் இருக்கே.அடடா அடடா .இந்த புரோட்டாவுக்கு வீச்சு புரோட்டா,முட்டை புரோட்டா,கைமா புரோட்டா,கொத்து புரோட்டா,கறி புரோட்டா இப்படி இன்னும் நிறைய பங்காளிகள் இருக்காங்க .இருந்தாலும் வெறும் புரோட்டாவை பிச்சு போட்டு சால்னா ஊத்தி சாப்புட்டறதுதான் உச்ச பட்ச சுகம்.
இந்த Bangalore-ல ஒரு விசாரணை கமிஷன் வச்சாவது நல்ல புரோட்டா சால்னா எங்க கெடைக்குதுன்னு கண்டு பிடிக்ணும்பா.இல்லைனா "கோவில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம்" -னு நம்ம முன்னோர்கள் சொன்ன மாதிரி "நல்ல புரோட்டா சால்னா கிடைக்காத ஊரில் வேலை பார்க்க வேண்டாம்" -னு வேற ஊரை பார்க்க போயிரணும்.
Tuesday, January 09, 2007
என் கேள்விக்கென்ன பதில்?
சமீபத்தில் நம்ம வெட்டிப்பயல் வலைப்பூவின் மூலம் நண்பர் கைப்புள்ள-யின் சித்தூர்கட் செலவு தொடர் படிச்சிட்டு இருந்தப்ப நம்ம சிற்றறிவுக்குள்ள ஒரு பல்பு எரிஞ்சது .வடக்கு மற்றும் மேற்கு இந்தியாவில இருக்குற மாதிரி நம்ம தமிழ்நாட்டுல ஏன் ஒரு கோட்டையோ ,அரண்மனைகளோ இல்லை?.ஹைதராபாத்-ல கோல்கொண்டா கோட்டை இருக்கு.கர்நாடகால பிஜப்பூர் கோட்டை ,மைசூர் அரண்மனை இப்படி இன்னும் நெறய இருக்கு.கேரளால திருப்பணித்துறா அரண்மனை,கொச்சின் அரண்மனை இப்படி நெறய இருக்கு.ஆனா நம்ம தமிழ்நாட்டுல ஏன் அப்படி ஒண்ணும் இல்லை?.நம்ம ராஜாக்களும் பெரிய பெரிய அரண்மனைகள் கட்டி அதுல பொன் விதானம் எல்லாம் வேய்ஞ்சு வாழ்ந்ததா படிச்சு இருக்கோம்.இத்தனைக்கும் சோழ,பாண்டிய,பல்லவ மன்னர்கள் கட்டிட கலையில் சிறந்தவங்களா இருந்திருக்காங்க.பாண்டியர்களுக்கு மதுரை மீனாக்ஷி அம்மன் கோவில்,சோழர்களுக்கு தஞ்சை பெரிய கோவில் மற்றும் கங்கை கொண்ட சோழபுரம்,பல்லவர்களுக்கு மகாபலிபுரம் மற்றும் காஞ்சிபுரம் கோவில்கள் அவங்களோட கட்டிட கலை சிறப்புக்கு ஆதாரமா இருக்கு.மேலும் முகலாய மன்னர்களோ வேற்று மன்னர்களோ தமிழ்நாட்டுக்குள்ள அவ்வளவா படை எடுத்து வரவே இல்லை.கர்நாடகாவுல பேளூர்,ஹலேபேடு கோவில் எல்லாம்வேற்று மன்னர்கள் படை எடுப்பால நெறய சேதாரம் ஆகி இருக்கு.ஹலேபேடு அரண்மனை அழிஞ்சே போச்சு.ஆனாலும் அங்க மைசூர் அரண்மனை இன்னும் ரொம்ப நல்ல நிலைமையில இருக்கு.நம்ம தமிழ்நாட்டுல கோட்டைனு சொல்லணும்னா திண்டுக்கல் திப்பு சுல்தான் கோட்டை,வேலூர் கோட்டை, செஞ்சி கோட்டை இதைத்தான் சொல்ல முடியும்.இதை எல்லாம் கோட்டைனு சொல்ல கூடாது கோட்டை சிதிலங்கள் அப்படினுதான் சொல்லணும்.அரண்மனைனு சொன்னா தஞ்சை மராத்திய மன்னர்கள் அரண்மனை சொல்லலாம்.அப்படின்னா சோழ,பாண்டிய மன்னர்கள் வாழ்ந்த அரண்மனை எல்லாம் எங்கே?.வேற்று நாட்டு மன்னர்கள் படை எடுத்து வந்து அழிச்சதா நம்மகிட்ட சரித்திர ஆதாரம் எதுவும் இருக்குற மாதிரி தெரியலை.காலப்போக்கில் அழிஞ்சிருந்தாலும் இருந்த எல்லா அரண்மனை,கோட்டையுமா அழிஞ்சுடும்.மன்னர்ககள் கட்டிய கோவில்கள் எல்லாம் இன்னும் ரொம்ப நல்லா இருக்கே?.அது எப்படி?.அந்த கோட்டைகளும்,அரண்மனைகளும் என்ன ஆச்சு?.யாருக்காவது இதை பத்தி ஏதாவது தெரிஞ்சா இல்லை இதை பததி ஏதாவது லிங்க் இருந்தா என் குழப்பத்தை தீர்த்து வைங்கப்பா.
Subscribe to:
Posts (Atom)