
தற்போது கிடைத்த தகவலின்படி நடிகை மும்தாஜுக்கு இந்திய அரசின் வீரச்செயல்களுக்கான விருதினை சிறப்பு தகுதியில் வழங்கும்படி தமிழ்நாடு அரசால் பரிந்துரைக்கப் பட்டுள்ளது.சமீபத்தில் தமிழக முதல்வர் கருணாநிதிக்கு சிறப்புக்காட்சியாக ""வீராச்சாமி" படத்தை திரையிட்டு காட்டியுள்ளார் விஜய T(terror??) ராஜேந்தர்.முதல்வர் படம் பார்த்துவிட்டு ஒன்றுமே சொல்லாமல் சென்று விட்டதாக தகவல்(தகவல் உபயம்: ஜுனியர் விகடன் மிஸ்டர் மியாவ்).
இப்பொழுதுதான் படம் பார்த்த அதிர்ச்சியில் இருந்து (படத்தில் விஜய T. ராஜேந்தரை பார்த்த அதிர்ச்சியில் இருந்து ) மீண்ட முதல்வர் உடனடியாக மன்மோகன் சிங்குக்கு தொலைபேசி, இந்த படத்தில் ராஜேந்தருடன் ஜோடியாக நடிக்கின்ற அளவுக்கு தைரியம் உள்ள மும்தாஜுக்கு வீரச்செயல்களுக்கான இருப்பதிலேயே உயர்ந்த விருதை குடுக்க மறுத்தால், மத்தியஅரசுக்கு குடுத்து வரும் ஆதரவை வாபஸ் பெறப் போவதாக சொல்லி இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தெரிய வருகிறது.கூடிய விரைவில் இதற்கான அறிவிப்பை நீங்கள் எதிர்பார்க்கலாம்.
நாமும் நமது சார்பில் மும்தாஜுக்கு வீரச்செயல் புரிந்ததற்கு நமது பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறோம்.
0 comments:
Post a Comment