Wednesday, January 24, 2007

பேனா நட்பும் வலைப்பூக்களும்

இந்த தமிழ்ப் பதத்தை எங்கேயோ கேள்விப்பட்ட மாதிரி இருக்கா?.சும்மர் 20 வருடங்களுக்கு முன்பு மிக பிரபலமாக இருந்த ஒரு விஷயம்.ஒரு விதத்தில் மிக ஆரோக்கியமாக இருந்த விஷயம் கூட.பேனா நண்பர்கள் குழுக்கள் எல்லா பிரபல பத்திரிக்கைகளிலும் அவர்கள் விலாசங்களுடன் பிரசுரம் செய்வார்கள்.புதிய நட்புகள் சமூகத்தின் எல்லா மட்டத்திலும் அவர்கள் முகம்,குலம் , இனம்,மொழி அறியாமல் அவர்களின் ஒத்த கருத்துகளுக்காகவும் ,குணத்துக்காகவும் அமையும்.முகம் அறியா நண்பர்களுடன் பல விதமான விஷயங்களை பேசுவதுடன் தமிழகத்தின் மூலை முடுக்குகளிலும் நமக்கு நண்பர்கள் உள்ளனர் என்ற ஒரு சந்தோஷமான என்ணத்தையும் கொடுத்தனர் இந்த பேனா நண்பர்கள்.இந்த பேனா நட்பின் மூலம் வேலை கிடைப்பது மற்றும் பல விதமான
உதவிகளும் கிடைத்து பயன் பெற்றவர்களும் உண்டு.இவர்களில் ஒருவருக்கு ஒருவர் முகம் பார்க்கவே கூடாது என்று உறுதி எடுத்து கொண்டும் நீண்ட காலம் நட்பு கொண்டவர்களும் உண்டு.


சரி இப்போ எதுக்கு இந்த பேச்சு என்று கேட்கிறீர்களா? .இந்த வலைப்பூக்களில் (blog) உலாவும் போது பேனா நட்புக்கும் வலைப்பூ நட்புக்கும் உள்ள நிறைய ஒற்றுமைகள் புரிந்தது.இதை சிறிது தொழில்நுட்ப முன்னேற்றமடைந்த பேனா நட்பு என்று சொல்லலாமா தெரியவில்லை .சில வித்தியாசங்கள் இருக்கின்றன.வ.பூ ல் சிலர் முகம் தெரியும் ,மற்றும் வலை பூ பதிவாளரின் பதிவுகளை பார்க்க அவர் அனுமதி தேவை இல்லை.பேனா நட்பில் மற்றவர் அனுமதியும் வேண்டும்.வலைப்பூவில் கொஞ்சமாவது கணினி பயிற்சி
பெற்றவர்கள் மட்டுமே கருத்துக்கள் பகிர்ந்து கொள்ள முடியும்.பேனா நட்பில் அப்படியில்லை.இப்படி நிறைய ஒற்றுமை வேற்றுமைகளை சொல்லி கொண்டே போகலாம்.ஆனால் இந்தப் பதிவின் நோக்கம் அதுவல்ல.

பேனா நட்பு "பேணா நட்பாகி" போய் விட்ட இந்த நாகரிக உலகத்தில் வலைப்பூ பேனா நட்பு விட்டு சென்ற இடத்தில் இருந்து அந்த நோக்கத்தை நிறைவேற்றி கொண்டு இருக்கிறது என்பது தான் நான் சொல்ல விரும்புவது.மேலும் இது மக்களுக்குள் இருக்கும் எழுத்து திறமை, கற்பனை, நகைச்சுவை,உதவும் மனப்பான்மை போன்ற பலவற்றையும் வெளிக்கொணர்வதால் இந்த concept -ஐ கண்டு பிடித்தவர்க்கு ஒரு பெரிய கும்பிடு போட்டு விட்டு நானும் ஒரு வலைப்பூ பதிவாளன் என்ற பெருமையோடு எனது இந்தப் பதிவை முடித்துக் கொள்கிறேன்.(யாருப்பா அது அங்க "கருத்து சொல்றதை நிறுத்துங்கப்பா" அப்படின்னு மொணங்குறது)

Sunday, January 14, 2007

கல்யாணம் ஆனா சிங்கம் நிலைமையும் இதுதான்


நம்மளோட கல்யாணமான நண்பர்கள் சில பேர் நாங்க எல்லாம் சிங்கம்னு சொல்லிட்டு திரியுறாங்க.அவங்க சிங்கம் இல்லை அசிங்கம்னு எங்களுக்கு தெரியும்.சிங்கமா இருந்தாலும் கல்யாணம் ஆனா இப்படித்தான் நிக்கணும்னு படம் போட்டு காட்டுறாங்க இவங்க ரெண்டு பேரும்.

பிரம்மச்சாரி சிங்கங்கள் எல்லாம் பார்த்து சூதானமா இருந்துக்கங்கப்பா .

பொங்கலோ பொங்கல்!!


தமிழ் கூறும் நல்லுலகத்து மக்கள் அனைவருக்கும் எனது இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

Saturday, January 13, 2007

ஒரு புரோட்டா திங்க முடியுதா இந்த ஊர்ல?.

நானும் இந்த பரந்த Bangalore- ல எவ்வளவோ இடத்துல முயற்சி செஞ்சு பார்ததுட்டேன்.நல்ல புரோட்டா சால்னா சாப்புடணும்னு. ஊஹூம்.நடக்குற காரியமா தெரியலை.இந்த பொன்னுசாமி,அண்ணாச்சி,மால்குடி,அய்யனார் இது மாதிரி கடைக்கு எல்லாம் போனா புரோட்டா குடுத்துட்டு தனியா gravy order பண்ணுங்கன்னு சொல்றாங்க.எங்கயாவது நடக்குமா இந்த அநியாயம்?.எங்க ஊருல எல்லாம் இந்த மாதிரி சொன்னா வெட்டு குத்து ஆகிப் போயிரும்.ஒரு புரோட்டா-வுக்கு சால்னா,ஆம்லெட் வாங்கினா ஸ்பெசல் குழம்பு,அதுக்கு அப்புறம் mutton இல்ல chicken வாங்கினா வருவல் குழம்பு,ஈரல் குழம்பு அப்படின்னு நாலு புரோட்டா வாங்கின புரோட்டாவுக்கு ஒரு குழம்பு வாங்கி சாப்பிட்ட பயக நாங்க.விதியேனு சிக்கன் குழம்பு வாங்கி சாப்பிட்டா அது சாப்பாட்டுக்கு போட்டு சாப்புடுற அளவுக்கு புரோட்டாவுக்கு நல்லா இல்லை."வெற்றி தோல்வி எல்லாம் வீரனுக்கு ஜகஜம்" அப்படின்னு நம்ம தலைவர் கைப்புள்ளை மாதிரி சொல்லிட்டு நமக்கு இந்த "speciality restaurant " எல்லாம் சரிப்பட்டு வராதுன்னு முடிவு பண்ணிட்டு நம்ம லோக்கல் B.T.M ,மாருதி நகர்ல சில கடையில முயற்சி செஞ்சு பார்த்தேன்.ஊஹூம் எல்லா இடத்துலயும் காய்கறி எல்லாம் போட்டு vegetarian குருமாதான் கெடைக்குது.அது நம்ம சால்னா மாதிரி இல்லை.சரி அப்படியே ஜெயா நகர், J.P.நகர் ,பசவனகுடி, V.V.புரம் அப்படினு போனா இந்த மாதிரி புரோட்டா கடைகளே இல்லை.நண்பர்களிடமும்,அன்பர்களிடமும் விசாரிச்சதில மத்த இடங்களிலும் கூட சிறப்பா ஒண்ணும் இல்லைனு தெரிஞ்சது.அட கொடுமைக்கு ஓசூர் போய் கூட இது வரைக்கும் ஒரு நாலு அஞ்சு எடததுல சாப்ட்டு பார்த்துட்டோம்."கொடுமை கொடுமைனு கோவிலுக்கு போனா அங்க ரெண்டு கொடுமை ஜிங்கு ஜிங்குனு ஆடிச்சாம்".அங்கயும் இதே கதைதான்.

புரோட்டா-ன்னா என்ன சாதாரணமான விசயமா?.ஒரு பெரிய குண்டா நெறய மாவு எடுத்து அதுல நடுவுல பெரிய ஏரி மாதிரி குழி தோண்டி அதுல எண்ணை (சில பேரு முட்டையும் ) விட்டு ஒரு அரை மணி நேரம் நல்லா பிசைஞ்சு வச்சுடணும்.அப்புறம் தான் முக்கியமான விசயமே.அதை சின்ன உருண்டையா திரட்டி உருட்டி "பெருமால் மஹாபலிக்கு குள்ளமானவரா இருந்து விஸ்வரூபம் காட்டியது மாதிரி" அந்த சின்ன உருண்டை மாவா இது அப்படினு வியக்கிற மாதிரி பெரிய ரோஸ்ட் தோசை அளவுக்கு வீசணும்.இதில் தான் புரோட்டா மாஸ்டரின் கைவண்ணமே தெரியும். அப்படி வீசுற அழகு இருக்கே.பார்க்க கண் கோடி வேணும். எவ்வளவு மெல்லிசாவும் பெருசாவும் வீசுறாங்களோ அந்த அளவு புரோட்டா மிருதுவாவும்,அடுக்குகளுடனும்(Layers) வரும்.அப்புறம் அதை கல்லில் போட்டு கருகாம எடுத்து நல்ல நாலு பக்கமும் வெறப்பு போக தட்டணும்.இல்லைனா சாமி குத்தம் ஆகிப் போயிடும்(அப்பதான் layers தெரியுங்கறது மற்றும் ஒரு காரணம்).இப்படி வர புரோட்டாவை சும்மா ரெண்டு கையாலயும் சின்ன சின்னதா பிச்சு போட்டு (ஊருல புரோட்டா கொண்டு வர்றவரே அந்த இலவச சேவையும் செய்வார்) அதுல சால்னா ஊத்தி சாப்புடற சுகம் இருக்கே.அடடா அடடா .இந்த புரோட்டாவுக்கு வீச்சு புரோட்டா,முட்டை புரோட்டா,கைமா புரோட்டா,கொத்து புரோட்டா,கறி புரோட்டா இப்படி இன்னும் நிறைய பங்காளிகள் இருக்காங்க .இருந்தாலும் வெறும் புரோட்டாவை பிச்சு போட்டு சால்னா ஊத்தி சாப்புட்டறதுதான் உச்ச பட்ச சுகம்.


இந்த Bangalore-ல ஒரு விசாரணை கமிஷன் வச்சாவது நல்ல புரோட்டா சால்னா எங்க கெடைக்குதுன்னு கண்டு பிடிக்ணும்பா.இல்லைனா "கோவில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம்" -னு நம்ம முன்னோர்கள் சொன்ன மாதிரி "நல்ல புரோட்டா சால்னா கிடைக்காத ஊரில் வேலை பார்க்க வேண்டாம்" -னு வேற ஊரை பார்க்க போயிரணும்.

கணினி பொறியாளர்கள் இளிச்சவாயர்களா ?

Bangalore -ல் தினம் காலை செய்தி தாள் திறந்தால் மூன்றாம் பக்கத்தில் இது போல் ஒரு செய்தி நீங்கள் கட்டாயம் பார்க்கலாம் "software engineer robbed ". சமீப காலங்ககளாக தினம் இது போன்ற கணினி பொறியாளர் கொள்ளை அடிககப்பட்டார் என்ற செய்தியுடன் கணினி பொறியாளர் தாக்கப்பட்டார் மற்றும் கணினி பொறியாளர் கொலை செய்யப்பட்டார் போன்ற செய்திகளும் சர்வ சாதாரணமாக வருகின்றன. மறு தினம் இந்த செய்தி மறக்கப்பட்டு விடுகிறது.தினம் தினம் இந்த கொள்ளைகள் நடந்தாலும் கண்டு கொள்வோர் யாருமில்லை.இதற்கு என்ன காரணம் இருக்க முடியும்?.நகரத்தின் பிற பகுதிகளில் மற்ற பிறருக்கு இது போன்ற சம்பவங்கள் நடக்கும் போது அதை பெரிது படுத்தும் செய்தி ஊடகங்கள் கூட இதை பெரிது படுத்துவது இல்லை.கணினி பொறியாளர்கள் கொள்ளையர்களுக்கு சுலபமான குறிகள்(soft target) ஆகிவிட்டார்களா ?.என் நண்பர்களுக்கு நிகழ்ந்த அனுபவங்களில் இருந்து காவலர்களும் கணினி பொறியாளர் என்றாலே நிறைய பணம் கறக்கலாம்,இல்லை எனில் "நீ சொன்னவுடனே எல்லாம் செய்யமுடியாது,எங்களுக்கு நெறய வேலை இருக்கு" போன்ற மனப்பான்மையுடன்தான் பார்க்கிறார்களே தவிர உதவி செய்யும் நோக்கம் கொஞ்சம் கம்மியாகத்தான் உள்ளது.


இதற்கு சில அறிவு ஜீவிகள் கணினி பொறியாளர்களிடமும் சில தவறுகள் உள்ளதாக சொல்கிறார்கள்.உதாரணமாக wallet -ல் நிறைய பணம் வைத்திருப்பதாகவும்,நிறைய பண மதிப்புள்ள செல்பேசி வைத்திருப்பதாகவும் சொல்கிறார்கள்.இதை எப்படி எடுத்து கொள்வது?.எனக்கு எவ்வளவு செலவுக்கு பணம் வேண்டுமோ அதை வைத்து கொள்வது என் சௌகரியம்.செல்பேசியும் அப்படியே.சரி பணம் நெறய வேண்டாம் கார்ட் வைத்து கொள்ளலாம் என்றாள் PIN number கேட்டு நூதனமாக கொள்ளை அடிக்கிறார்கள்.ராத்திரியில் தனியாக வருவதால் இந்த பிரச்சினை என்றால் நமது வேலை சில சமயம் அப்படி வேண்டுகிறது.பணம் நிறைய வைத்து கொண்டு ,card வைத்து கொண்டு நடு ராத்திரியில் வேறு profession -ல் இருப்பவர்கள் யாரும் வருவதில்லயா?.அவர்கள் எல்லாம் பத்திரமாக சென்று வருகிறார்களே.அது எப்படி? கணினி பொறியாளர்கள் மீதான இது போன்ற தாக்குதல்களுக்கு என்ன தீர்வு இருக்க முடியும் ,இதை எப்படி தடுக்கலாம்?.நண்பர்களும் அன்பர்களும் சொல்ல முடியுமா?.

Thursday, January 11, 2007

ISRO makes a comeback

Six months ago, there was gloom when the Geosynchronous Satellite Launch Vehicle(GSLV) failed in flight after an engine malfunction. Now, the
nation and the Indian Space Research Organisation have good reason to cheer. The Polar Satellite Launch Vehicle (PSLV), the workhorse launcher of the Indian space programme that had already flown eight consecutive successful missions, has once again turned in a flawless performance. On Wednesday, the PSLV launched India’s most advanced earth-observation satellite, the country’s first effort at a recoverable capsule,and two small satellites for foreign customers. ISRO has not limited itself to building increasingly more sophisticated earth-viewing satellites; it has played a key role in establishing the capability within government and industry to utilise the images from space for practical ends. When IRS-1C was launched in 1995, its black-and-white images were capable of picking up objects just 5.8 metres across; they also offered the highest resolution satellite images that were commercially available at the time. Cartosat-2, which has been launched by the PSLV, will provide images with a resolution of less than a metre, which means they are suitable for many town planning activities, mapping,and several other applications.Two scientific tests are to be conducted aboard the Space Capsule Recovery Experiment (SRE-I) under very low gravity conditions that prevail as it orbits the earth. After several days in space, the capsule will, on command from ground stations, fire onboard rockets to reduce its speed and make a controlled re-entry before splashing down in the Bay of Bengal. The Soviet Union and the United States first developed recoverable space capsules for film-based spy photography. Since 1975, China has successfully launched several recoverable capsules for microgravity experiments as well as for photography. Should India opt for a manned space programme of its own, ISRO will find its experience in re-entry with recoverable capsules invaluable.

Cricket lessons from South Africa tour

The disappointing end to the Indian cricket
team’s tour of South Africa was an outcome of
flawed decision-making, poor tactics, and a
defensive mindset when it came to the endgame.
On an India-friendly pitch , Rahul
Dravid’s men dominated the match for three full
days and more. But when the prize seemed within
grasp, on the fourth afternoon, the visiting team shied
away, as if afraid of a famous first, a series win in South
Africa. The defensive mentality — exemplified by the
rut that Sachin Tendulkar (69 deliveries for his 14) got
his team into in the second innings after a winning
platform had been constructed — was quite inexplicable.
On the other side, the home team displayed impressive
tactical flexibility and courage in the face of
adversity. The contrast in mental approach between
the aggressive Smith-Pollock partnership and the stagnant
Tendulkar-Dravid pairing proved, in the end, to
be the qualitative difference between the two teams.
There were, of course, some bright features amidst
the gloom of the series loss. Rarely has India travelled
overseas with a bowling attack capable of destroying
the opposition’s batting. It unearthed a man for that
task in Sreesanth (18 wickets at 21.94), who forged a
fine pace alliance with a resurgent Zaheer Khan. The
young man from Kerala showed the kind of disciplined
aggression that pays on the big stage, a quality Team
India displayed in good measure under Sourav Ganguly
not long ago. For Ganguly himself, the tour marked a
creditable comeback while young Dinesh Karthik displayed
impressive character and skills both behind the
stumps and in front. Surely, it would be hard to leave
him out of the reckoning in India’s Test eleven. If the
chief lesson for Team India was the need to discard the
defensive mindset, the International Cricket Council
urgently needs to address the issue of declining umpiring
standards. The quality of officiating in the Castle
Test series was decidedly unsatisfactory, even though
it must not be allowed to become an excuse for India’s
series loss. In a sense, it was just as well that Team
India managed to snatch defeat from the jaws of victory
in South Africa. Victory might have helped paper over
the serious weaknesses of Indian cricket, notably the
decline in the top order batting (once, arguably, the
best in the world) and a strange loss of team management
confidence in spin, evidenced by the otherwise
inexplicable preference of an out-of-sorts Munaf Patel
to Harbhajan Singh at Newlands. The time to tackle
these serious weaknesses is now and neither reputation
nor seniority should be allowed to come in the way.

Tuesday, January 09, 2007

என் கேள்விக்கென்ன பதில்?

சமீபத்தில் நம்ம வெட்டிப்பயல் வலைப்பூவின் மூலம் நண்பர் கைப்புள்ள-யின் சித்தூர்கட் செலவு தொடர் படிச்சிட்டு இருந்தப்ப நம்ம சிற்றறிவுக்குள்ள ஒரு பல்பு எரிஞ்சது .வடக்கு மற்றும் மேற்கு இந்தியாவில இருக்குற மாதிரி நம்ம தமிழ்நாட்டுல ஏன் ஒரு கோட்டையோ ,அரண்மனைகளோ இல்லை?.ஹைதராபாத்-ல கோல்கொண்டா கோட்டை இருக்கு.கர்நாடகால பிஜப்பூர் கோட்டை ,மைசூர் அரண்மனை இப்படி இன்னும் நெறய இருக்கு.கேரளால திருப்பணித்துறா அரண்மனை,கொச்சின் அரண்மனை இப்படி நெறய இருக்கு.ஆனா நம்ம தமிழ்நாட்டுல ஏன் அப்படி ஒண்ணும் இல்லை?.நம்ம ராஜாக்களும் பெரிய பெரிய அரண்மனைகள் கட்டி அதுல பொன் விதானம் எல்லாம் வேய்ஞ்சு வாழ்ந்ததா படிச்சு இருக்கோம்.இத்தனைக்கும் சோழ,பாண்டிய,பல்லவ மன்னர்கள் கட்டிட கலையில் சிறந்தவங்களா இருந்திருக்காங்க.பாண்டியர்களுக்கு மதுரை மீனாக்ஷி அம்மன் கோவில்,சோழர்களுக்கு தஞ்சை பெரிய கோவில் மற்றும் கங்கை கொண்ட சோழபுரம்,பல்லவர்களுக்கு மகாபலிபுரம் மற்றும் காஞ்சிபுரம் கோவில்கள் அவங்களோட கட்டிட கலை சிறப்புக்கு ஆதாரமா இருக்கு.மேலும் முகலாய மன்னர்களோ வேற்று மன்னர்களோ தமிழ்நாட்டுக்குள்ள அவ்வளவா படை எடுத்து வரவே இல்லை.கர்நாடகாவுல பேளூர்,ஹலேபேடு கோவில் எல்லாம்வேற்று மன்னர்கள் படை எடுப்பால நெறய சேதாரம் ஆகி இருக்கு.ஹலேபேடு அரண்மனை அழிஞ்சே போச்சு.ஆனாலும் அங்க மைசூர் அரண்மனை இன்னும் ரொம்ப நல்ல நிலைமையில இருக்கு.நம்ம தமிழ்நாட்டுல கோட்டைனு சொல்லணும்னா திண்டுக்கல் திப்பு சுல்தான் கோட்டை,வேலூர் கோட்டை, செஞ்சி கோட்டை இதைத்தான் சொல்ல முடியும்.இதை எல்லாம் கோட்டைனு சொல்ல கூடாது கோட்டை சிதிலங்கள் அப்படினுதான் சொல்லணும்.அரண்மனைனு சொன்னா தஞ்சை மராத்திய மன்னர்கள் அரண்மனை சொல்லலாம்.அப்படின்னா சோழ,பாண்டிய மன்னர்கள் வாழ்ந்த அரண்மனை எல்லாம் எங்கே?.வேற்று நாட்டு மன்னர்கள் படை எடுத்து வந்து அழிச்சதா நம்மகிட்ட சரித்திர ஆதாரம் எதுவும் இருக்குற மாதிரி தெரியலை.காலப்போக்கில் அழிஞ்சிருந்தாலும் இருந்த எல்லா அரண்மனை,கோட்டையுமா அழிஞ்சுடும்.மன்னர்ககள் கட்டிய கோவில்கள் எல்லாம் இன்னும் ரொம்ப நல்லா இருக்கே?.அது எப்படி?.அந்த கோட்டைகளும்,அரண்மனைகளும் என்ன ஆச்சு?.யாருக்காவது இதை பத்தி ஏதாவது தெரிஞ்சா இல்லை இதை பததி ஏதாவது லிங்க் இருந்தா என் குழப்பத்தை தீர்த்து வைங்கப்பா.