Thursday, January 22, 2009

LIC warning - important one


Public Notice from LIC


Dear Policyholders,

With the help of our past experiences and keeping in view the interests of
our beloved policyholders, please be informed of the below announcement:


We will not pay money for policy holders those who die after watching the
movie ‘VILLU ' starring Vijay. As per the new rules, this comes under
‘SUICIDE’ category, which is not eligible for payments.

We deeply regret the sorrowful deaths of those who dared to watch this
movie and extend our condolences to the bereaved families. May their souls rest
in peace. - Amen.


Regards,
Life Insurance Corporation of India. "Jeevan
ke saath bhi ... Jeevan ke baad bhi"

இங்கிலிபீஸுக்கு மன்னிக்கவும். இ-மெயிலிலிருந்து சுட்டது :-)

Friday, July 25, 2008

பெங்களூரு தொடர் குண்டு வெடிப்பு விபரங்கள்

பெங்களூருவில் இன்று 4 இடங்களில் மதியம் 1.30 மணியில் இருந்து 12 நிமிட இடைவெளியில் தொடர் குண்டுவெடிப்புகள் நிகழ்ந்துள்ளன.இன்னும் இரண்டு இடங்களிலும் குண்டு வெடிப்பு நிகழ்ந்து உள்ளதாக செய்திகள் இருப்பினும் அவை உறுதி செய்யப்படவில்லை.மடிவாலா பேருந்து நிறுத்தம், அடுகோடி, ஆனேபாளயா,நந்தனஹள்ளி,ராஜாராம் மோஹநன் ராய் சர்க்கிள், ரிச்‌மண்ட்சர்க்கிள் அருகில் மற்றும் ஷ்யாம் நகர் இடங்களில் இந்த குண்டு வெடிப்புகள் நிகழ்ந்து உள்ளன.இதில் 3 பேர் உயிர் இழந்தாதாக தகவல் (செய்திகளில் சொன்னாலும் இது இன்னும் உறுதி செய்யப் படவில்லை) .மற்றும் 20 பேர் தீவிர காயங்களுடன் St.ஜான்ஸ் மற்றும் பிற மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

இதில் மடிவாலா,அடுகோடி மற்றும் ரிச்‌மண்ட்சர்க்கிள் போன்றன நகரத்தின் மைய இடங்களில் இருப்பது மட்டுமன்றி மக்கள் அதிகம் புழங்கும் இடங்களும் ஆகும்.தெய்வாதீனமாக வெடித்த குண்டுகள் வீரியம் குறைந்த வகைகளை சேர்ந்தவையாக இருந்தன.அநேகமாக ஜெலட்டின் குச்சிகள் பயன்படுத்தப்பட்டு இருக்கலாம் என தெரிகிறது.காவல் துறை,bomb ஸ்க்வாட் மோப்ப நாய்களுடன் தடயங்களுக்காக இப்பொழுதே குண்டு வெடிப்பு இடங்களில் காணப்படுகிறார்கள்.நகரத்தின் தொலை பேசி இணைப்புகள் மற்றும் அலைபேசி அலைவரிசைகளும் நண்பர்கள் மற்றும் உறவினர்களின் தொடர் விசாரிப்புகளால் நிரம்பியுள்ளன.இப்பொழுது கிடைத்துள்ள தகவல்கள் இவையே.

கணிணி துறையில் முண்ணணியில் இருப்பதும்,தென்னிந்தியாவின் அமைதியான நகரங்களில் ஒன்றுமான பெங்களூருவில் நடந்த இந்த சம்பவம் தீவிரவாதத்திற்கு எதிரான கடும் நடவடிக்கைகள் வேண்டும் என்பதை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.இந்த குண்டுவெடிப்பில் இறந்த மற்றும் காயமடைந்த அனைத்து நபர்களுக்கும் எமது இரங்கல்கள்.

Wednesday, May 30, 2007

ரஜினியின் "சிவாஜி -The BOSS " பட டிரைலர்


ஆவலுடன் எதிர்பார்க்ககப்படும் தலைவர் ரஜினியின் சிவாஜி பட டிரைலர் பார்க்க இங்கே சொடுக்கவும்.


பேரைக் கேட்டா அதிருதில்ல -- தலைவா! அம்சம்.சீக்கிரம் வாங்க.

Tuesday, May 29, 2007

சென்னையில்" சிவாஜி -The Boss" வெளியிடப்படும் தியேட்டர்களும் ஷோ நேரங்களும்

THEATRE NO OF SHOWS Expected Ticket Rates

1)Abirami
(Abirami, Bala, Annai, Sakthi Abirami) (Jun 15,16,17) – 20 shows 50,40,10
(includes 9:00 am show)
Other days 16 Shows


2)Albert (Albert, Baby Albert) (Jun 15,16,17) – 10 shows 50,45,10
(includes 9:00 am show)
Other days 8 Shows


3)AVM Rajeshwari (Jun 15,16,17) – 5 shows 50,45,10
(includes 9:00 am show)
Other days 4 Shows


4)Bharath (Jun 15,16,17) – 5 shows 50,45,10
(includes 9:00 am show)
Other days 4 Shows

5) Inox (Jun 15,16,17) – 16 shows
(Inox 1,2,3) (includes 9:00 am show in all 4 screens) 120
Other days 12 Shows


6) Jayapradha (Jun 15,16,17) – 10 shows 50,30
(Jayapradha, Raj)
(includes 9:00 am show)
Other days 8 Shows

7)Mayajaal (Jun 15,16,17) – Shows from 80,70,10
8:00 am to 11:30 pm Nonstop
screening approximately 25 shows
or more.

8)Sathyam
(Sathyam, Santham/Sree) (Jun 15,16,17) – 14 shows (includes 120,100,95
80,75,60
9:00 am show in Sathyam, Santham,
Seasons, Sree, Studio 5,Six Degrees)
Other days 8/12 Shows

9)Shanthi (Jun 15,16,17) – 10 shows 50,45
(Shanthi, mini Shanthi) (includes 9:00 am show)
Other days 8 Shows

10)Sri Brindha (Jun 15,16,17) – 5 shows 50,45
(includes 9:00 am show)
Other days 4 Shows

11)Udhayam (Jun 15,16,17) – 20 shows 60,50,40
(Udhayam, Sooriyan,
Chandran, mini Udhayam)
(includes 9:00 am show)
Other days 16 Shows




* Note that Sathyam will not update the thecinema.in website on the first day of reservation. You got to check the tickets at theatre only.
* Inox Preference will be given for internet, SMS and Bulk booking to avoid crowd at City Center
* Theatre Agastya may also screen Shivaji
Other theaters in suburbs with expected minimum number of shows on first three days

Ambathur Raaki (15)
Chromepet Vettri (10 shows)
Thiruvanmiyur Thyagaraja (5)
Adyar GanapathyRam (5)
Prathana dive in (7)
Kolthur Ganga (15)
St Thomas Mt Jothi (5)
Karapakkam Aravind (5)
Poondhamalli Sundar (15)
Virugambakkam Sridevi (15)
Nanganallur Velan (15)
Kanchipuram Aruna (10)
Koyembedu Rohini (20 )
Thiruvottiyur Odean Mani (5)

and the list continues…………….

Monday, May 14, 2007

சன் டிவியின் மை டியர் பூதமும் விஜய் டிவியின் ஸ்மால் வொண்டரும்

குழந்தைகளுக்காக என்று சொல்லி ஒளிபரப்பப்படும் இந்த இரண்டு தொடர்களையும் சென்ற வாரத்தில் இரண்டு நாட்கள் பார்த்தேன்.குழந்தைகள் தொடரை ஒரு குழந்தை (ஹி ஹி நான்தான்) பார்க்குறதுல என்ன அதிசயம்னு நீங்க கேக்கலாம்.(கேக்கலைனாலும் நான் கேட்டதா நினைச்சுப்பேன்).

இந்த ரெண்டு தொடர்களையும் ஒரு மணி நேர இடைவெளியில் பார்த்ததில மனதில் பட்ட சில விசயங்களை பற்றித்தான் இந்த பதிவு.

சன் டிவியின் தொடரில் காட்டப்படுவது எல்லாம் பில்லி,சூனியம்,மந்திரவாதம் போன்ற விசயங்கள் மட்டுமே.அதுவும் சாகசம் என்ற பெயரில். அதில் வரும் முக்கிய பாத்திரங்களான மூசா மற்றும் மற்றும் சிலரின் சிறப்பு தகுதி ஒரு இடத்தில் மறைந்து தோன்றுவது , காற்றில் பொருள் எடுப்பது , எதிர் வரும் பிரச்சினைகளை மந்திரம் மாயங்கள் மூலம் (அறிவுத் திறனால் அல்ல) விரட்டுவது,நாடகத்தில் வரும் வில்லன் பாத்திரங்களை (வயதில் பெரியவர்களாக இருந்தாலும்) அடித்துத் துரத்துவது ,வசைச் சொற்கள் பேசுவது (போடாங் கொய்யாவெல்லாம் மிகச் சாதாரணமாக பேசப்படுகிறது), கோஷ்டி தகராறு...... இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.இதில் வரும் குழந்தைகளின் பள்ளி வாழ்க்கையை காட்டுவதே இல்லை. பெற்றோர்- குழந்தைகள் பிணைப்பும் காட்டப்படுவதே இல்லை.இதில் வரும் குழந்தைகள் குழுக்களாக திட்டம் போடுவது , தைரியசாலிகளாக காட்டப்படுவது என்று சில நல்ல விசயங்களும் உள்ளன.

விஜய் டிவி-தொடரில் வரும் முக்கிய பாத்திரம் இயந்திரக் குழந்தை விக்கி மற்றும் அதன் அண்ணன் ஜேமி(Jamie).இருவரும் பள்ளியில் படிப்பவர்கள்.ஆனால் இதில் இந்த மந்திர மாயம் எல்லாம் கிடையாது. குழந்தைகள் இருப்பிடங்களை சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும் , பொய் சொல்லக் கூடாது , படிப்பு மட்டும் இல்லாமல் பிற விசயங்களையும் கற்றுக் கொள்ள வேண்டும் , தங்கள் வேலைகளை தாங்களே செய்து கொள்ள வேண்டும் , .....இப்படிப்பட்ட விசயங்கள், முக்கியமாக போதிப்பது போல் இல்லாமல் அந்த பாத்திரங்கள் செய்யும் விசயங்களை வைத்தே சொல்லப்படுகிறது.விடலைப் பருவத்தை எட்டும் ஜேமிக்கு அவன் பெற்றோர்கள் தகுந்த முறையில் வழி காட்டுகிறார்கள்.இதில் வரும் தந்தை மற்றும் தாய் இருவருமே குழந்தைகளை குடும்பத்தின் அன்றாட சுழற்சியில் ஓர் அங்கமாகவே வைத்திருப்பார்கள்.தந்தை குழந்தைகளுடன் விளையாடுவார் , பிள்ளைகள் அம்மாவுக்கு சமையலில் உதவி செய்வார்கள். இந்தத் தொடரிலும் சில நெருடல்கள் உண்டு . பிள்ளைகளின் முன் முத்தமிட்டு கொள்வது , பக்கது வீட்டுப் பெண் குழந்தை ஜேமி மீது மையல் கொண்டு பெரும் பேச்சுகள் பேசுவது , மற்றும் டேட்டிங் போன்ற விசயங்கள்.ஆனால் இவற்றில் சில தப்பு என்று சொல்ல முடியாது.நமது சமூகத்தில் பழக்கம் இல்லை என்று வேண்டுமானால் சொல்லலாம்.

இதில் தற்போதைய சூழ்நிலையில் வளரும் குழந்தைகளுக்கு எது போன்ற தொடர்கள் வேண்டும் என்பது நான் சொல்லித்தான் தெரிய வேண்டும் என்பதில்லை.இந்த தொடர்களால் மட்டுமே அந்த குழந்தைகளின் எண்ணங்களோ,செயல்களோ முழுவதும் மாறி விட போவதில்லை.இருந்தாலும் விதைப்பதை நல்லதாக விதைக்கலாமே.பலனை பொறுத்திருந்து பார்ப்போம்.

அம்புட்டு நல்லவனாடா நீ? என்று கேட்கும் அன்பர்களுக்கு இந்த விளக்கம்.வார இறுதியில் எங்க வீட்டு தொலைக்காட்சி ரிப்பேர் ஆயிடுச்சு.அதனால டிவி பார்க்காம மல்லாக்க படுத்து விட்டத்தை வெறிச்சதுல உதிச்சதுதான் இந்த சிந்தனை எல்லாம்.ஒரு வேளை சின்ன வயசுல இந்த மாதிரி நல்ல தொடர்கள் நிறைய பார்த்திருந்தா நான் கூட ரொம்ப நல்லவனா,வல்லவனா(சிம்பு மாதிரி இல்லவே இல்லை) வளர்ந்து அப்துல் கலாமுக்கு அடுத்தபடியா ஜனாதிபதி ஆகியிருக்கலாம்.யார் கண்டது ?.நீங்களே பின்னூட்டத்தில சொல்லிட்டு (துப்பிட்டு?! ) போங்க :-).

Wednesday, May 02, 2007

சூழலின் சுழல்


ஜன்னலுக்கு வெளியே மழை
உதட்டில் பட்டுத் தெறித்த
ஒரு துளி ஈரம்

வலைக்கம்பியில் தொற்றிய
ஈர்ப்பு நீர்த்திவலைகள்

உடல் தோலை குறுகுறுத்த
ஈரக்காற்றின் குளிர்வு

மேகங்கள் மேற்கொண்ட
உயிர்ப்புள்ள தேடல்கள்

வாடையின் அரவணைப்பில்
பசுமரங்கள் சிலிர்க்கும்
சித்திரங்கள்

சூழலின் சுழலுக்குள்
சிக்கிய மனசு

தூண்டிலிட்டது கவிதை எழுத! .

Tuesday, March 20, 2007

நூதன முறையில் தமிழர்களுக்கு எதிரான போராட்டம்

கர்நாடகாவில், முக்கியமாக பெங்களூருவில் இந்த காவேரி பிரச்சினை வந்ததுக்கு அப்புறம் இந்த கர்நாடக மக்கள் என்னென்னவோ வழிகளில் காவேரி நடுவர் மன்ற தீர்ப்புக்கு அவங்க எதிர்ப்பை தெரிவிச்சுகிட்டு இருக்காங்க.சாலை மறியல், ரயில் நிறுத்தம் ,உண்ணாவிரதம்,கடை அடைப்பு இப்படி பல வழிகளில் போராட்டம் பண்ணியும் அவங்க எதிர்ப்பை சரியா காட்டலையோனு நெனச்சுட்டாங்களோ என்னவோ இப்ப ஒரு புது முறையில இந்த எதிர்ப்புப் போராட்டத்தை தொடங்கி இருக்காங்க.ஆனால் இந்த முறை இது நிச்சயமா தமிழர்களை மட்டும் இல்லாமல் அனைத்துப் பிரிவு மக்களையும் பாதிக்கிற விதமா இருக்கு.


கேபிள் டிவியில தமிழ் சானல்களை தடை செய்தும் , கடந்த ஒரு மாதமாக எந்த தமிழ் படமும் ரிலீஸ் செய்யாமலும் கூட தமிழர்களின் உறுதியை குலைக்க முடியாத கர்நாடக மக்கள் கடைசி ஆயுதமாக இதை கையில் எடுத்திருக்கிறாங்க.என்னனு கேக்கறீங்களா?.போன வாரம் நெறய சினிமா தியேட்ர்களில் ஒரே நேரத்துல "வீராச்சாமி " படத்தை ரிலீஸ் செஞ்சு இருக்காங்க.வேற எந்த தமிழ் படமும் ரிலீஸ் ஆகாத நெலமையிலே தெரியாம இதைப் போய் பார்க்குற மக்கள் எங்களுக்கு காவேரி தண்ணியே வேண்டாம் தயவு செஞ்சு இந்த படத்தை மட்டும் பாக்க சொல்லாதீங்க அப்படீனு கதறி அழுவுறாங்களாம்.








இந்த பிரச்சினைக்கு இப்படி ஒரு பயங்கர ஆயுதத்தை கையில் எடுத்து போராடுவதை எதிர்த்து பெங்களூருவில் உள்ள தமிழ் மக்களை எல்லாம் சேர்த்து கன்னட மக்களும் இந்தப் படத்தை கட்டாயம் பார்க்க வேண்டும் என்று ஒரு எதிர் போராட்டம் செய்யலாமா அப்படினு யோசிச்சுகிட்டு இருக்கேன்.பெங்களூரு மக்கள் யாராவது சப்போர்ட்டுக்கு வர்றீங்களா?.

டிஸ்கி :- இது ஒரு மொக்கை பதிவு.இதை ஏண்டா பதிவோட ஆரம்பத்துலயே சொல்லலைனு கேக்காதீங்க. அப்புறம் யாரு பதிவை படிப்பா?.துப்புறவங்க எல்லாம் தாராளமா துப்பிட்டு போகலாம்.