
ஜன்னலுக்கு வெளியே மழை
உதட்டில் பட்டுத் தெறித்த
ஒரு துளி ஈரம்
வலைக்கம்பியில் தொற்றிய
ஈர்ப்பு நீர்த்திவலைகள்
உடல் தோலை குறுகுறுத்த
ஈரக்காற்றின் குளிர்வு
மேகங்கள் மேற்கொண்ட
உயிர்ப்புள்ள தேடல்கள்
வாடையின் அரவணைப்பில்
பசுமரங்கள் சிலிர்க்கும்
சித்திரங்கள்
சூழலின் சுழலுக்குள்
சிக்கிய மனசு
தூண்டிலிட்டது கவிதை எழுத! .